விடுதலைப் புலிகளை மன்னிக்கவே முடியாது - கருணாநிதி

 ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப் புலிகளை மன்னிக்கவே முடியாது என்று முதலமைச்சர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.


விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை தனது நல்ல நண்பர் என்று கூறியிருந்த கருணாநிதி, தாம் கூறிய கருத்துக்கள் திரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று தாம் கூறவேயில்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்கள்  பற்றி தாம் கவலை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக தொடங்கப்படவில்லை என்றும் ஆனால் பின்னர் அது பயங்கரவாத குழுவாக மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப் புலிகளை நாம் ஒரு போதும் மன்னிக்க முடியாது என்று கருணாநிதி தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூரை நம்மால் மறக்க முடியாது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கருணாநிதி, பிரபாகரன் தனது நல்ல நண்பர் என்றும், அவரை தாம் ஒரு தீவிரவாதியாக பார்க்கவில்ல என்றும் கூறினார்.

கருணாநிதியின் இந்தப் பேட்டி திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது.

இந்த நிலையில் இன்று தமது பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கருணாநிதி விடுதலைப் புலிகளை மன்னிக்க முடியாது என்றும், அவர்கள் நோக்கம் சரியானது என்றும், ஆனால் அவர்கள் செல்லும் பாதை தவறானது என்றும் கூறியுள்ளார்.

 ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப் புலிகளை மன்னிக்கவே முடியாது என்று முதலமைச்சர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை தனது நல்ல நண்பர் என்று கூறியிருந்த கருணாநிதி, தாம் கூறிய கருத்துக்கள் திரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று தாம் கூறவேயில்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்கள்  பற்றி தாம் கவலை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக தொடங்கப்படவில்லை என்றும் ஆனால் பின்னர் அது பயங்கரவாத குழுவாக மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப் புலிகளை நாம் ஒரு போதும் மன்னிக்க முடியாது என்று கருணாநிதி தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூரை நம்மால் மறக்க முடியாது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கருணாநிதி, பிரபாகரன் தனது நல்ல நண்பர் என்றும், அவரை தாம் ஒரு தீவிரவாதியாக பார்க்கவில்ல என்றும் கூறினார்.

கருணாநிதியின் இந்தப் பேட்டி திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது.

இந்த நிலையில் இன்று தமது பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கருணாநிதி விடுதலைப் புலிகளை மன்னிக்க முடியாது என்றும், அவர்கள் நோக்கம் சரியானது என்றும், ஆனால் அவர்கள் செல்லும் பாதை தவறானது என்றும் கூறியுள்ளார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes