கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்.














கோடையில் தவிர்க்க வேண்டியவை 

அதிக வியர்வை இருக்கும்போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக்கூடாது. 
மதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. 
கோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அலைந்து திரிந்து 
வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல. 
சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். 
கறுப்பு வண்ணம் சூரிய ஒளியை உள்வாங்கும் எனவே வெளியே செல்லும்போது கருப்பு வண்ண குடைகளை எடுத்துச்செல்லாதீர்கள். 
வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. 
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீரைத் தவிர்த்திடுங்கள். குளிர்ந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது. 
கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. 
வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம். 

கோடையில் செய்ய வேண்டியவை 























உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். 
அதிக நீர்ச்சத்துள்ள ஆரஞ்சு, சாத்துகுடி, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். 
இளநீர், பனை நுங்கு, பதநீர் சாப்பிடலாம். இவை உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். 
வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும் 
எனவே அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. 
காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். 
மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசனிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சீரணமடையும் உணவுகளை உண்பது நல்லது. 
தினமும் இருமுறை குளிப்பது நல்லது. 
வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். 
தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும். 
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. 
சர்க்கரை நோயாளிகள் கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. 
வெளியே செல்லும்போது வெண்மை நிற குடைகளை பயன்டுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது. 






0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes