மொபைல் சேவையில், 2.75ஜி எட்ஜ் தொழில் நுட்பத்தில் ஜி.எஸ்.எம். சேவையை வழங்கி வரும் வீடியோகான் நிறுவனம், சென்ற வாரம் அதிரடியாய், இந்தியா முழுவதும் பேச, நிமிடத்திற்கு 25 பைசா மட்டுமே கட்டணம் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்ற நவம்பரில், மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பலத்த வரவேற்பைப் பெற்றதால், தற்போது இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரி பெய்ட் சிம் மட்டுமே இந்த நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முறை ரீசார்ஜ் செய்கையில், குறைந்த தொகையான ரூ.25 மற்றும் அதற்கு மேலும் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த திட்டம் தானாக அமல்படுத்தப்படும்.
மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடுதலாக 50% உயர்ந்தது என்றும், அதே போல இந்தியா முழுமையும் தாங்கள் எதிர்பார்ப்பதாக, இந்நிறுவன முதன்மை விற்பனை அதிகாரி சுனில் டான்டன் கூறினார்.
ட்ராய் அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் மொபைல் போன் இணைப்பினை 68 கோடியே 77 லட்சம் பேர் பெற்றிருந்தாலும், அவர்களில் 70% பேர் மட்டுமே தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தி வருவதாக, தொலைதொடர்பு பிரிவினைக் கட்டுப்படுத்தும் ட்ராய் அமைப்பு அறிவித்துள்ளது.
அதாவது 48.29 கோடி பேர் தொடர்ந்து மொபைல் இணைப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர். புதிதாக இந்த பிரிவில் சேவை நிறுவனங்களாக நுழைந்த சிஸ்டமா ஷ்யாம், எஸ்.டெல், யூனிடெக், லூப், வீடியோகான் மற்றும் எடில்சாட் ஆகியவை தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை, மிகவும் குறைந்த அளவிலேயே கொண்டுள்ளனர்.
இந்த வகையில், பாரதி ஏர்டெல் 90% மற்றும் ஐடியா 88% பேர் தொடர்ந்து பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.
1 comments :
100% Genuine & Guarantee Money Making System.(WithOut Investment Online Jobs).
Visit Here For More Details :
http://bestaffiliatejobs.blogspot.com/2010/12/read-articles-to-earn-money.html
Post a Comment