நடிகர் வடிவேலுவிடம் சக காமெடியர்கள் சிலர் ரூ.7 கோடி வரை ஏமாற்றி விட்டார்கள்.
விசாரித்த உண்மை: இந்த விவகாரம் குறித்து சக காமெடியர்கள் சிலரிடம் விசாரித்தால் அவரு வைகை புயல் இல்லீங்க. பொய்கை புயல்.
அவரப்போயி யாராச்சும் ஏமாத்த முடியுமா? ஒரு டாக்குமெண்ட்டை நம்மக்கிட்ட படிச்சு காட்டச் சொல்வாரு. ஒரு வார்த்தை விடாம அர்த்தத்தையும் கேட்டுக்குவாரு. அதுக்கு பிறகு அந்த டாக்குமெண்ட்டை இன்னும் படிச்சவங்க பலரிடம் வாசிச்சு காட்டச் சொல்லுவாரு.
எல்லாரும் சொல்றது ஒரே மாதிரி இருந்தத்தான் கையெழுத்தே போடுவாரு, என்கிறார்கள். அதேநேரம் இந்த விவகாரம் பற்றி வடிவேலுவிடம் கேட்டால், ஒண்ணு மண்ணா பழகிட்டு கண்ணுல ஊசியை செருகிட்டாங்க. போயிட்டு போறாங்க.
அவுங்க மேல புகார் குடுத்து அவுங்க வாழ்க்கையை ஏன் கெடுக்கணும், என்று மன்னிப்பு மனப்பாண்மையுடன் பேசுகிறார்
0 comments :
Post a Comment