அண்மையில் மத்திய அமைச்சரவை, ""புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கைத் திட்டம் 2012''க்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
தகவல் தொழில் நுட்பத் துறையில் புதியதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கும், இணையத் தொடர்பினைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பவர்களுக் கும், மொபைல் போன் வாடிக்கையாளர் களுக்கும் இது மகிழ்ச்சி தரும் பல விஷயங்களைத் தந்துள்ளது. 
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பாதுகாப்பான, நம்பி செயல்படக் கூடிய, அனைவரும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தக் கூடிய உயர்ந்த தரம் மிக்க தொலைதொடர்பு வசதிகளை அளிப்பதாகும். 
இதன் மூலம் சமுதாய பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயரும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள்:
1. கிராமப்புறங்களில் தொலைதொடர்பு வசதிகளை இப்போதைய 39 சதவிகிதத் திலிருந்து 70 சதவிகிதமாக 2017 ஆம் ஆண்டுக்குள் உயர்த்தி, 2010ல் 100% ஆக உயர்த்துவது.
2. குறைந்தது 2 Mbps வேகத்தில் அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பினை வழங்குவது. 
3. இந்தியாவிலேயே தொலை தொடர்பு சாதனங்களைத் தயாரிக்க அடிப்படை வசதிகளையும், தொழில் நுட்ப அறிவையும் அளிப்பது.
4. நெட்வொர்க் இணைப்புகள் மற்றும் சாதனங்களை ஒருங்கிணைப்பது.
5. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினை, தொலைதொடர்பு துறையின் அனைத்து பிரிவுகளும் பயன்படுத்தும் வகையில் அளிப்பது.
6. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினைப் பயன்படுத்த உரிமம் வழங்குவதனை எளிமைப்படுத்தி, இணைய வழியில் விண்ணப்பித்து உரிமம் பெறுவதனை அமல்படுத்துதல்.
7. மொபைல் போன் பயன்பாட்டில், மொத்த இந்தியாவினையும் ஒரு மண்டலமாகக் கொண்டு வருவது; ரோமிங் கட்டணத்தை அடியோடு ரத்து செய்வது மற்றும் ஒரே எண்ணை எந்த மண்டலத் திற்கும் சென்று, அந்த மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளும் உரிமை தருதல்.
8. சேவையை மற்றவர்களுக்கு மாற்றி விற்பனை செய்தல்.
9. இன்டர்நெட் வழிமுறை மூலம் பேச வசதி தருதல்.
10. ஐ.பி.வி.6 பெயர் அமலாக்கம் மற்றும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையை வளர்த்தல்.
நுகர்வோர் விரும்பும் அனைத்து பிரிவுகளையும் இந்த இலக்குகள் குறி வைத்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த இலக்குகள் அடையப்பட்டால், நிச்சயம் இந்தியப் பொருளாதாரம் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.
                    
                     
1 comments :
தகவலுக்கு நன்றி நண்பா !
Post a Comment