சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா?


`காத்ரீனா', `ரீட்டா', `வில்மா' இதெல்லாம் ஏதோ பிரபல டென்னிஸ் வீராங்கனை பெயர்கள் போல் எண்ண தோன்றுகிறதா?. அதுதான் இல்லை. இவைகளெல்லாம் சமீபத்தில் அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடிய சூறாவளிகள். `ஊரை அடித்து உலையில் போடவேண்டும்' என்று சொல்வது இதற்குத் தான் பொருந்தும். இந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள் அடுத்த பேரிடியாக பாகிஸ்தான், காஷ்மீர் பூகம்பங்கள். 

உலகின் அனுதாபப் பார்வை நியூ ஆர்லியன்ஸிலிருந்து ஆசியாவின் பக்கம் திரும்பி விட்டன. முன்பெல்லாம் ஒரு இயற்கை பேரழிவிற்கும் மற்றொரு இயற்கை பேரழிவிற்கும் நீண்ட இடைவெளி இருக்கும். எப்பொழுதாவதுதான் நடக்கும். எல்லாமே கொரில்லா தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துவிட்டன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியுமா? சூறாவளி, புயல் இவைகள் மனிதனுடைய உடைமைகளை அப்படியே விழுங்கிவிடும் ஒரு ராட்சத அரக்கன். 

நிலவில் காலடி வைக்க முடிகிற நம்மால் ஏன் இதை நிறுத்த முடியாது அல்லது இதன் வேகத்தையாவது கட்டுப்படுத்த முடியுமா ? அல்லது குறைந்தபட்சம் குறைக்க முடியுமா? என்று விஞ்ஞானிகளின் கேள்வியாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக விஞ்ஞானிகள் இயற்கை சீற்றமான சூறாவளியை எப்படி தடுக்கலாம் அல்லது குறைந்த பட்சம் எப்படி அதன் தீவிரத்தைக் குறைக்கலாம் என்று பல்வேறு ஆராய்ச்சி முறைகளை கண்டறிந்து வருகிறார்கள். 

1906-ம் ஆண்டு கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகரத்தை 7.8 ரிக்டரில் உலுக்கியது பூகம்பம். ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாயின. கிட்டத்தட்ட 3ஆயிரம் மக்கள் இறந்தனர். 

1944-ம் ஆண்டு இத்தாலியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரபலமான விசுவையஸ் எரிமலை குமுறியதில் சுமார் 150 பேர் இறந்து போனார்கள். கடந்த வருடம் ஜனவரி மாதம் ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய நில அதிர்வு பலம் வாய்ந்த கட்டிடங்கள் தரைமட்டமானதோடு பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 

சுமத்ரா தீவின் கடற்பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் 30 அடி உயர சுனாமிக்கு வித்திட்டது. பல லட்சக்கணக்கானோர் உயிரி ழந்தனர். உலகின் ஒட்டுமொத்த கவனமும் சுனாமி பாதித்த பகுதிகளை நோக்கி நகர்ந்தன. 

இவ்வளவு அறிவியல் வளர்ந்தும் நாம் இன்னும் இதுபோன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள இயலாத, சக்தியில்லாதவர்களாகத்தான் இருக்கின்றோம். கடந்த நூற்றாண்டுகளாக உலகின் மக்கள் தொகை பல மடங்காக உயர்ந்திருக்கிறது. 1906-ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் பூகம்பம் ஏற்பட்டபோது உலகின் மொத்த மக்கள் தொகை 160 கோடி தான்.

இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது நம்மை தாக்கி கொண்டே இருக்கிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களில் வாழும் மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு மாறினால் தவிர இத்தகைய பேராபத்து களிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள முடியாது. ஆனால் இது நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியமாகுமா? என்பதுதான் கேள்விக்குறி. 

வேறு என்னதான் மாற்றுவழி. சமீப பத்தாண்டுகளாக சில நவீன யுத்திகள் விஞ்ஞானிகளின் அறிவு பார்வையில் இதற்கான வழிமுறைகள் தென்பட்டு வருகின்றன.

விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வமுள்ள வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானிகள் ஏராளமான திட்டத்தை கண்டறிந்தார்கள். இதில் விண்வெளியிலிருந்து வெப்பக்கதிர்களை சூறாவளி கடக்கும் கடற்கரையின் பாதையில் இராட்சத காற்றாலை எந்திரங்களின் மூலம் பாய்ச்சுவது. ஆனால் இதில் உறுதியான நிலை தென்பட வில்லை. 

அமெரிக்க அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதாவது விமானங்களிலிருந்து வெள்ளி அயோடைடுகளை சூறாவளி வீசப்போகும் இடங்களிலுள்ள கருமேக மண்டலங்களில் தூவ வேண்டும். இதன்மூலம் வெப்பச்சலனம் ஏற்பட்டும் சூறாவளியை பலவீனமடையச் செய்து விடுகிறது. 1961ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகள் 4 முறை இந்த முறையை மேற்கொண்டுள்ளனர். 


அமெரிக்காவின் சூறாவளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் ஹப் வில்லோபி ஒரு திட்டத்தை வகுத்தார். உட்க்ஞுஹஙீஙீ தக்சிஙீஹஷக்ஙுக்ஙூஞ் என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் சூறாவளியின் தீவிரத்தை நிலைகுலையச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றார். இம்முறையைப் பயன்படுத்தி டெக்சாஸ் மாநிலத்தை நோக்கி படையெடுத்த ரீட்டா சூறாவளியை பலவீனமடையச் செய்தார்கள். ஹப் கூறுகையில், "இந்த முறைக்கு 50 மில்லியன் டாலர்கள் செலவாகியது'', என்கிறார்.

மற்றொரு அணுகுமுறையான கடற்பஞ்சுகளை ஜெட் விமானங்கள் மூலம் வீசச் செய்வது. இம்முறையின் மூலம் சூறாவளியின் வேகத்தை தகர்க்க முடியும். மற்றொரு முறையில் வடதுருவப் பிரதேசத்திலிருந்து பெரிய பனிப்பாறைகளை உஷ்ண பிரதேசத்திற்கு இழுப்பதன் மூலம் அப்பிரதேசத்தை குளிரடையச் செய்ய முடியும். இதன் மூலமும் கடும் சூறாவளியை கட்டுக்கு கொண்டுவரலாம். 

தேசிய இயற்கை பேரழிவு மையத்தின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் சிம்ப்ஸன் எண்ணெயை விமானங்கள் மூலம் தெளிப்பதன் மூலம் அதன் வேகத்தை வலுவிழக்கச் செய்யமுடியும் என்பதை கண்டறிந்தார். 1970-ம் ஆண்டு ரஷ்யாவில் இந்தமுறை சோதிக்கப்பட்டது. அதனால் எதுவும் பலன் ஏற்பட்டதா என்பதை அறியமுடியவில்லை.

பத்து ஆண்டுகளாக அனைத்து முறைகளையும் கேட்டறிந்த வில்லோபி, அவர் "கட்டிட நூலிழைக் கண்ணாடியின் மூலம் கடல் மேற்பரப்பிலுள்ள நீரை உறிஞ்சுவதன் மூலம் வளைகுடா பகுதியை குளிரடையச் செய்யவேண்டும். இதுவும் சூறாவளியைக் கட்டுப்படுத்தும் என்ற வழிமுறையாகக் கண்டறிந்தார்.

புயல், சூறாவளியினால் பூமியினுடைய வெப்பப் பிரதேசத்தில் இருக்கும் அதிக வெப்பத்தை வெளியேற்றுகிறது. மேலும் மாசுவையும் கட்டுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மாஸாசூஸ்ஸட் மாகாணத்திலுள்ள ஒரு தனியார் ஆராய்ச்சிக் கழகத்தின் வான்மண்டல ஆய்வாளர் ராஸ் ஹோப்மேன் தன்னுடைய ஆராய்ச்சியில் கண்ணாடிகளின் உதவியுடன் செயற்கைக் கோள்களின் மூலம் சூரியக் கதிர்களை பாய்ச்சுவதன் மூலம் சூறாவளியின் மற்றும் புயலின் தன்மையை மாற்றிவிடலாம் என்கிறார். 
MIT-யின் வேதியியல் பொறியியல் வல்லுனர் ராபர்ட் லேஞ்சர் ஒரு திட்டத்தை அறிவித்தார். அதாவது சூறாவளி உருவாகும் பிரதேசத்தில் நீராவியை எந்திரத்தின் மூலம் உறிஞ்சுவதன் மூலம் தடுக்கமுடியும் என்று தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். இது சிம்ப்ஸனின் எண்ணெய் தெளிக்கும் முறைக்கு மாற்றுமுறையாகும்.

வில்லோபி வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு முறையை பரிசீலனை செய்தார். அதாவது சூறாவளி நகரும் பாதையில் ராட்சத துணிகளை இழுத்துக் கட்டுவதன் மூலம் கட்டுப்படுத்தும் முறை. ஆனால் இம்முறைக்கு கொலம்பியா மாவட்டத்தின் அளவைப் போல் 10 மடங்கு துணி தேவைப்படுகிறது.

இயற்கை சீற்றங்களை முழுவதும் முறியடிக்க இயலாவிட்டாலும் ஓரளவு அதற்கான சாத்தியக்கூறுகளை நவீன விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி எவ்வாறு குறைக்கலாம். எந்தத் தன்மையில், சூழ்நிலைகளில் உருவாகிறது? அதற்கான மாற்றுவழி என்ன? இயற்கை வளம் மற்றும் இயற்கை சூழ்நிலைகளில் அறிவியலை திணிப்பதால் புவியின் சீற்றத்திற்கு ஆளாகிறோமா? என்பதை கண்டறிய வேண்டும். 

எது எப்படியிருந்தாலும் இயற்கை சீற்றங்கள் எல்லாம் பூமியின் பழிவாங்கும் நடவடிக்கையல்ல. இயற்கையாகவே நிலையற்ற தன்மையில் உள்ள பூமியில் வாழ்வதற்கு நாம் கொடுக்கும் விலையே இயற்கை. மனிதன் ஆதிகாலத்தில் இயற்கையாக வாழ்ந்து அனுபவித்தான். 

ஆனால் இன்றைய நவீன உலக மனிதன் இயற்கையினை தன் வசப்படுத்த முயலும்போது இயற்கையினை, பூமியினை, கடலினை மற்றும் இயற்கை அம்சங்களை துளைத்து, வருத்தி பல சாகசங்களை, அதிசயங்களை செய்யும்போது இயற்கை பூகம்பம், சூறாவளி, புயல், காற்று, மழை, சுனாமி, பஞ்சம் போன்ற தன்னுடைய இன்னொரு (கோர) முகத்தை காண்பிக்கிறது. இவையனைத்திற்கும் காரணம் இயற்கையினை கையகப்படுத்த மனிதனின் எல்லையில்லா முயற்சியே! 



0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes