ஆப்பிள் நீக்கிய அப்ளிகேஷன் புரோகிராம்கள்

ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து (iTunes App Store) அண்மையில், 256 அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது. 

இவை வாடிக்கையாளர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை (ஆப்பிள் ஐ.டி. சாதனங்களின் தனி அடையாள எண்கள் போன்றவை) அணுகித் தன் பயன்பாட்டிற்கென சேமித்து வைத்தது தெரிய வந்தது. 

இதனால், அந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் தன் ஸ்டோரிலிருந்து ஆப்பிள் நீக்கிவிட்டது. 

இந்த அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் சீன நாட்டு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, ஆப்பிள் அனுமதியுடன் அதன் ஸ்டோரில் அமைக்கப்பட்டவையாகும். ஏறத்தாழ, 10 லட்சம் பேர்கள் வரை இவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும், இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் மூலம், ஆப்பிள் ஸ்டோரிலும் மால்வேர் புரோகிராம்கள் பரவிட வாய்ப்புகள் இருந்ததனால், ஆப்பிள் இந்த முடிவை எடுத்தது.


பேஸ்புக் இணையத் திட்டப் பெயர் மாற்றம்

பேஸ்புக் நிறுவனம் பன்னாட்டளவில், 18 நாடுகளில், இணைய இணைப்பினை இலவசமாகத் தருவதற்கென தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது. 

Internet.org என்ற பெயரில், ஒவ்வொரு நாட்டிலும், ஒரு மொபைல் சேவை நிறுவனத்துடன் இணைந்து, அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய இணைப்பில் முக்கியமான தளங்களுக்கான இணைப்பினைத் தருவதாக அறிவித்தது. 

இந்தியாவில், இதற்கென ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த இலவச திட்டம், சென்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. 

ஆனால், இது அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு என்ற அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்ற எதிர்ப்புக் குரல் பெரிய அளவில் எழுப்பப்பட்டது. 

இதனை, Free Basics என்ற பெயரில் மாற்றம் செய்து சென்ற அக்டோபர் 19ல், பேஸ்புக் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்ற பெயரில் உள்ள இணையதளத்தினையும், அதே பெயரில் பேஸ்புக் தரும் அப்ளிகேஷனையும் பிரித்துக் காட்டுவதே ஆகும் எனவும் பேஸ்புக் அறிவித்துள்ளது. 

இருப்பினும், இந்த திட்டம் இந்தியாவில் பலத்த எதிர்ப்பினை சந்தித்து வருகிறது. முதலில் இந்த திட்டத்தில் இணைந்த பல நிறுவனங்கள், அதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு, தனியே அதே போன்ற திட்டங்களை அறிவித்தன. 

பேஸ்புக், இந்த திட்டத்தின் வழியாக, எந்த அடிப்படையில் இலவசமாகத் தரும் இணையதளங்களை அறிவிக்கிறது என்ற கேள்வி அனைத்து மக்களிடமும் எழும்பியது. 

மொபைல் சேவை நிறுவனங்களுடன், பேஸ்புக் சதி செய்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது தீவிரமாகி, சென்ற மே மாதம், 70 குழுக்கள் இணைந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். 

அதில், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டம், அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு என்ற கொள்கைக்கு எதிரானது என்று கூறி, பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்களையும் எழுப்பினார்கள்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தன் வலைமனை ஒன்றில் தன் விளக்கத்தினை 7 நிமிடங்கள் ஓடும் விடியோ காட்சி மூலம் (http://www.wired.com/2015/05/internetorgexpandsnetneutrality/) மார்க் அளித்தார். எந்த மொபைல் சேவை நிறுவனங்களையும் இந்த திட்டம் கட்டுப்படுத்தாது என்றும், அனைவருக்கும் அனைத்து தளங்களையும் இலவசமாக அளிப்பது நடைமுறையில் சிரமம் என்றும் கூறினார். 

எந்த வழியிலும் இணையத்தை அணுக இயலாத மக்களுக்கு, இந்த திட்டம், பொருளாதார ரீதியில் இயலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் பங்கு பெறாத ஓர் இணையம் எப்படி அனைவருக்கும் சமமான இணையமாக இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதே வேளையில், மக்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், பேஸ்புக் நிறுவன நிர்வாகிகள் சில புதிய வழிமுறைகளை அறிவித்தனர். இந்த திட்டத்தில் எந்த ஒரு நிறுவனத்தையும் விலக்கி வைக்கப்போவதில்லை எனத் தெரிவித்தனர். 

அதன் பின்னர், Free Basics திட்டத்தில் 60 புதிய சேவை வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பயனாளர்கள், இவற்றில் எந்த சேவைகள் தங்களுக்கு வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். இந்த சேவைகளில், வேலை வாய்ப்பு விளம்பரங்கள், உடல் நலம் பேணுதல், விக்கிபீடியா தளங்கள் போன்றவை உள்ளன. 

இத்துடன், இணையத்தில் பாதுகாப்பும், தனிநபர் தகவல்களின் தனித்தன்மை காப்பற்றப்படுவதும் இருமுறை உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, இணைய இணைப்பின்போது, பாதுகாப்பான வழிமுறைகள் பல அடுக்குகளாக இயங்கும் என்று மார்க் உறுதி அளித்தார். 

“Free Basics” என்பது இணையத்திற்கு வழி நடத்தும் ஓர் அப்ளிகேஷனே தவிர, அது மட்டுமே இணையம் அல்ல என்று அறிவித்தார். இணைய இணைப்பு என்பது, அனைத்து மனிதர்களுக்குமான அடிப்படை உரிமை என்றும், அதனை உறுதிப்படுத்த பேஸ்புக் முயற்சி செய்கிறது என, அனைத்து நாடுகளின் ஆட்சியாளர்களிடமும் எடுத்துரைத்து வருகிறார். தன் அலுவலக வளாகத்திற்கு வரும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.


மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் 10 சாதனங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாய்த் தன் விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் சாதனங்களைச் சென்ற செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6ல், அறிமுகப்படுத்தியுள்ளது. 

முதன் முதலாகத் தான் வடிவமைத்த 'சர்பேஸ் புக்' (Surface Book) என்னும் மடிக் கணினியை வெளியிட்டது. மடிக்கணினிகளில் மிகச் சிறந்த உச்சத்தை இந்த மடிக்கணினி கொண்டுள்ளது. 

அதுதான் 'சர்பேஸ் புக்', என இதனை அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் பனோஸ் பனாய் (Panos Panay) குறிப்பிட்டார்.


சர்பேஸ் புக் மடிக்கணினி: 

இதுவே எங்கள் முதல் மடிக் கணினி. ஆனால் இதுவரை இயங்கிய மடிக்கணினிகள் அனைத்தின் அம்சங்களையும் மாற்றி அமைக்கப்பட்ட மடிக்கணினி. புதியதாக நாங்கள் ஒரு மடிக்கணினியைக் கண்டுபிடித்துள்ளோம்” என்று அவர் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டார்.

இது மடிக்கணினி மட்டுமல்ல. இதன் திரைப் பாகத்தைத் தனியே கழட்டி ஒரு குறுங்கணினியாகவும் (“டேப்ளட் பி.சி.”) பயன்படுத்தலாம். கீ போர்டில் ஒரு கீயை அழுத்தியவுடன், திரைப் பகுதி தானாகக் கழண்டு தனியே கிடைக்கிறது. 

எனவே இது ”ஒன்றில் இரண்டு” என அழைக்கப்படும் ஒரு சாதனமாக வெளிவந்துள்ளது. இதன் திரை 13.1 அங்குல அளவில் அமைந்துள்ளது. இது சற்று மாறுதலான அளவு தான். 

வழக்கமாக நாம் பார்த்த மடிக்கணினி திரைகளைக் காட்டிலும் சற்று உயரம் கூடுதலாக இருக்கும். இந்த திரைப் பகுதியை எந்தக் கோணத்திலும் வைத்துக் காணலாம். சற்று உயர்த்திப் பிடிக்கலாம். இதற்கு வழி வகுக்கும் வகையில், மைக்ரோசாப்ட் "dynamic fulcrum hinge, என்ற ஒரு சுழல் மையப் பிணைப்பினைப் பயன்படுத்தியுள்ளது. 

இதன் ஒளிப்புள்ளி என அழைக்கப்படும் 'பிக்ஸெல்' திறன் 3000 x 2000 ஆக உள்ளது. ஒரு சதுர அங்குலத்தில் 267 பிக்ஸெல்கள். மொத்தம் 60 லட்சம் பிக்ஸெல்கள். இதனைத் தொட்டும் இயக்கலாம். 'ஸ்டைலஸ்' பேனாவும் பயன்படுத்தலாம். 

எந்தக் கோணத்தில் பார்த்தாலும், காட்சி மிகத் தெளிவாக உள்ளது. திரையைத் தனியாகக் கழட்டி குறுங்கணினியாகப் பார்க்கையில், அதன் தடிமன் 7.7. மிமீ ஆக அமைகிறது. எடை 725 கிராம். மொத்த மடிக்கணினியின் தடிமன் 28.8 மிமீ. எடை 1.587 கிலோ. 

இந்த லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் சி.பி.யு. ஐ5 வகையைச் சேர்ந்தது. இதன் தற்காலிகச் செயல் (ராம்) நினைவகத்தினை 16 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் ஹார்ட் டிஸ்க் எஸ்.எஸ்.டி. வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை ஒரு டெரா பைட் அளவிற்கு உயர்த்தலாம். பின்புறமாக 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கேமராவும் உள்ளன. இதன் கீ போர்டில், விசைகள், பின்புறமாக ஒளியூட்டப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. 

கீழாக அமைக்கப்படும் சுட்டு தளம் (Track Pad) கண்ணாடியால் காக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தியவர்கள், நிச்சயமாக மவுஸ் பயன்பாட்டினை விரும்ப மாட்டார்கள் என்று மைக்ரோசாப்ட் அடித்துச் சொல்கிறது. விரல்ரேகை உணர்ந்து இயக்கவும் இதில் வசதி உள்ளது. 

இரண்டு யு.எஸ்.பி.3 போர்ட்கள் தரப்பட்டுள்ளன. முழு அளவிலான, எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதில் இணைக்கப்பட்டுள்ளது. “ஹலோ” என்று சொன்னால், நம் முகத்தினை அடையாளம் கண்டு இயங்க, கேமராவும் கிடைக்கிறது.

இதன் பேட்டரியின் திறன் தொடர்ந்து 12 மணி நேரம் கணினியை இயக்க மின்சக்தியினைத் தருகிறது.

இந்த 'சர்பேஸ் புக்' (Surface Book) வரும் அக்டோபர் 26 முதல் விற்பனைக்கு வருகிறது. ஆனால், தேவைப்படுபவர்கள், முன்பதிவினை அக்டோபர் 7 முதல் மேற்கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், இவற்றின் விலை தான் அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், கண்களில் நீர் வரவழைப்பதாகவும் உள்ளது. 

தொடக்க நிலை சர்பேஸ் புக் கணினியின் (Core i5, 8GB RAM, and a 128GB PCIe SSD) விலை அமெரிக்க டாலர் 1,499. இதில் கிராபிக்ஸ் செயலி தனியாக இருக்காது. கிராபிக்ஸ் செயலி தனியாகவும், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. யும் கொண்டதன் விலை 1,899 டாலர். உயர்நிலையில், Core i7 with 16GB RAM and a 512GB SSD கொண்ட கணினி 2,699 டாலர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அழகான தோற்றம் மற்றும் பிரித்தெடுத்த நிலையில் செயல்பாடு போன்றவற்றைக் காண https://www.youtube.com/watch?t=1&v=XVfOe5mFbAE என்ற காணொளியைக் காணவும்.

“விண்டோஸ் பயன்படுத்தும் பயனாளர்கள் முதலில் இதனைத் தங்கள் தேவை என உணர்ந்தனர். பின்னர், அதுவே தங்கள் தேர்வு என அறிந்தனர்; இப்போது அதுவே தாங்கள் நேசிக்கும் விண்டோஸ் என உணர்கின்றனர்” என சத்ய நாதெல்லா, இந்த காட்சி அரங்கில், விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்து அறிவித்தார்.


பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

பி.எஸ்.என்.எல். தரை வழி தொலைபேசியுடன் இணைந்த இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பணி நிறைவு பெற்றோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு இதுவரை கட்டணத்தில் 10% சலுகை தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. 

இதனை 5% ஆகக் குறைத்து அறிவிப்பினை பி.எஸ்.என்.எல். வழங்கியுள்ளது. இது 01-10-2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. 01/11/2015 முதல் வழங்கப்படும் பில்லில் இது காட்டப்படும். 

மேலும் விபரங்கள் தேவைப்படுவோர், கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1500 ஐத் தொடர்பு கொண்டு அறியலாம். வேறு நெட்வொர்க் தொலைபேசிகளிலிருந்து தொடர்பு கொள்வோர் 18003451500 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். 

மஹாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலைச் சுற்றி, இலவச வை பி இணைய இணைப்பினை பி.எஸ்.என்.எல். வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதத்தில், 3 நாட்கள், நாளொன்றுக்கு 30 நிமிடங்கள், இலவசமாக இணைய இணைப்பினை, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெற்றுப் பயன்படுத்தலாம். 30 நிமிடத்திற்கு மேலாகவும், இணைய இணைப்பு தேவைப்படுவோர், அதற்கான கூப்பன்களை, கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தலாம்.

இதற்கிடையே, சென்னையில், பத்து தொலைபேசி நிலையங்கள் சார்ந்த தரைவழி தொலைபேசிகள், அடுத்த மேம்படுத்த நிலை வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுவிட்டன என்றும், இதன் மூலம், மிகச் சிறப்பான இணைப்பினை, இந்த தொலைபேசி சந்தாதாரர்கள் (55,204) பெறுவார்கள் என்றும் பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. 

அடுத்தபடியாக, மேலும் 40 நிலையங்களில் இந்த மேம்படுத்தப்படும் பணி மேற்கொள்ளப்படும் என்றும், அதன் மூலம் 1,75,000 சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜிமெயில் - வியக்கத்தக்க வேலைப்பாடுகள்

உலகில் மிக அதிகமான பயனாளர்களைக் கொண்டு இயங்கும் அஞ்சல் சேவையில், ஜிமெயில் முதலிடத்தைக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. 

எனவே, இதனை மேம்படுத்தும், இதன் வசதிகளை அதிகப்படுத்தும் வழிகளை, நிச்சயம் அனைவரும் விரும்புவார்கள். இங்கு தரப்பட்டுள்ள பல வசதிகள், ஜிமெயில் பயனாளர்கள் இதுவரை அறியாத, ஆனால், அவர்களுக்குத் தேவைப்படும் வசதிகளாகும். 

இங்கு அவற்றின் பயன்பாடு, பயன்படுத்தும் விதம் குறித்து காணலாம். இவை அனைத்தும் கூகுள் நிறுவனத்தால் தரப்படவில்லை. இணையத்தில் இது போன்ற டூல்கள் நிறைய கிடைக்கின்றன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றின் தன்மைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. 

இவற்றின் மூலம், உங்களுடைய மின் அஞ்சல் கடிதங்களை யார் பின் தொடர்ந்து கண்காணிக்கின்றனர் என அறியலாம். உங்களுக்கு அஞ்சல் அனுப்பியவர்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். நமக்குச் சேதம் விளைவிக்க வந்திருக்கும் அஞ்சல்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.


1. Sortd:: 

இது ஒரு அருமையான தோற்றம் தரும் "ஸ்கின்” எனலாம். நம்முடைய இன்பாக்ஸை, நம் விருப்பத்திற்கேற்றபடி பிரிவுகளாக மாற்றி அமைக்கலாம். எந்த வேளையிலும், இந்த பிரிவுகளின் பெயர்களை மாற்றிக் கொள்ளலாம். 

நமக்குத் தேவையான பிரிவுகளை எப்போதும் கூடுதலாக அமைத்துக் கொள்ளலாம். இவற்றின் வரிசையையும், நம் விருப்பப்படி மாற்றியும் அமைக்கலாம். பிரிவுகளை அமைத்துவிட்டு, அஞ்சல்களின் தன்மைக்கேற்ப, அவற்றை மிக எளிதாக, இழுத்து வந்து, இந்த பிரிவுகளில் விட்டுவிடலாம். 


2. Ugly Email: 

நீங்கள் மின் அஞ்சல் ஒன்றைத் திறந்து படிக்கும் நேரம், எதில் நீங்கள் கிளிக் செய்கிறீர்கள், எங்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை எல்லாம் கண்டறிய பல டூல்கள் இணையத்தில் உள்ளன. 

அப்படியானால், அப்படி ஒரு டூல் பயன்படுத்தப்படுகிறதா என நாம் அறிந்து கொள்ளவும் ஒன்று இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இந்த Ugly Email என்னும் குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் செயலி. இதனை, பிரவுசருடன் இணைத்துவிட்டால், உங்கள் மின் அஞ்சல்கள் வேவு பார்க்கப்படுவதனைக் கண்டு கொள்ளலாம். 

நீங்கள் எதனையும் கிளிக் செய்திடும் முன்னாலேயே, இந்த எக்ஸ்டன்ஷன் தன் வேலயைத் தொடங்கிவிடுகிறது. இதனை இன்ஸ்டால் செய்த உடனேயே, உங்களுடைய இன் பாக்ஸில் உள்ள அஞ்சல்களில், எவை எல்லாம் கண்காணிக்கப்படுகின்றனவோ, அவற்றுக்கு அருகே, சிறிய கண் அடையாளம் ஒன்று காட்டப்படும்.


3. Full Contact: 

குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம் இது. உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புபவர்களின் சமூக நிலை, பணி நிலை போன்றவற்றை இது காட்டும். அவர்களின் ட்வீட்ஸ், இன்ஸ்டகிராம் போட்டோ, பேஸ்புக் அப்டேட் ஆகியவற்றை, இதன் மூலம் படித்தறியலாம். 

அத்துடன், அவர்களின் நிறுவனங்கள், அவை அமைந்துள்ள இடம், பணியாளர் எண்ணிக்கை அளவு போன்றவற்றையும் அறியலாம். இது கூகுள் காலண்டர் செயலியுடன் இணைந்து செயல்படும். ஏதேனும் ஒரு நிறுவனத்துடன் சந்திப்பு ஒன்றுக்கென நீங்கள் செல்வதாக இருந்தால், அங்கு செல்லும் முன், அந்த நிறுவனம் குறித்து அனைத்தையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


4. Mixmax :

மிக்ஸ்மேக்ஸ் எனப்படும் இந்த குரோம் பிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம், நல்ல பயனுள்ள விஷயங்களைக் கொண்டுள்ளது. மின் அஞ்சல்களிலிருந்தே, நம் சந்திப்புகளை அமைத்துக் கொள்ளலாம். 

உங்கள் அஞ்சல்கள் ஏற்கனவே படிக்கப்பட்டுள்ளனவா என்றும் அறியலாம். அப்படி யாரேனும் படித்திருந்தால், அவர்களின் அஞ்சல்களை, அவர்களுக்குத் தெரியாமல் நீங்கள் காணலாம். பிற்பாடு அனுப்பலாம் என்று முடிவு எடுக்கும் அஞ்சல்களை, அந்த குறியீட்டுடன் அமைத்து வைக்கலாம். ஒரே கிளிக் மூலம், மின் அஞ்சல்களுக்கான டெம்ப்ளேட்டுகளை அமைக்கலாம்.


5.Mailburn: 

இது ஐபோனுக்கான ஓர் அப்ளிகேஷன். இது, உண்மையான மக்கள் அனுப்பும் ஜிமெயில்களை அடையாளம் கண்டு அறிவிக்கிறது. அதாவது, நியூஸ்லெட்டர் போன்றவற்றை உங்கள் கம்ப்யூட்டரில், ஒதுக்கிக் காணலாம். அதாவது, அவசரத்தில், இவற்றை ஒதுக்கி, முக்கியமானவர்களிடமிருந்து வந்துள்ள அஞ்சல்களை அடையாளம் கண்டு படிக்க உதவுகிறது.


6. Unsubscriber: 

ஐபோனில், ஜிமெயில் பயன்பாட்டிற்கான அப்ளிகேஷன். இதனைப் பயன்படுத்தி, நாம் ஏற்கனவே, பதிந்து பெற்று வரும் குழுக்களிலிருந்து, நம்மைக் கழட்டிக் கொள்ள உதவும். பொதுவாக, சில தளங்களிலிருந்து தகவல்களைக் கொண்ட மின் அஞ்சல்களைப் பெற, நாம் அவற்றின் சந்தாதாரராகப் பதிந்து கொள்வோம். 

அவை தேவை இல்லை என்றால், இவை அனுப்பும், அஞ்சல்களிலேயே, அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள லிங்க் வசதி இருக்கும். ஆனால், சிலவற்றில் அந்த வசதி இருக்காது. நம் கழுத்தில் ஏறிய வேதாளமாகத் தொடர்ந்து அஞ்சல்கள் வந்து கொண்டே இருக்கும். அத்தகைய அஞ்சல் பதிவுகளிலிருந்து நம்மை விடுவிக்க இந்த அப்ளிகேசன் உதவுகிறது.


7. MailTrack.io: 

இது ஒரு குரோம் பிரவுசர் எக்ஸ்டன்ஷன். இதனைப் பயன்படுத்தி, நம் இமெயில் எப்போது அனுப்பப்பட்டது (ஒரு டிக் அடையாளம்), எப்போது பெற்றவரால் திறக்கப்பட்டது (இரண்டு டிக் அடையாளம்) எனக் கண்டு கொள்ளலாம். 

இது மட்டுமின்றி, பலருக்கு ஓர் அஞ்சலை அனுப்புகையில், அவர்கள் ஒவ்வொருவரும் எப்போது திறந்தனர் என்பதையும், தனித்தனியே தெரிந்து கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், அஞ்சலைப் பெற்றவர் எப்போது திறக்கிறாரோ, அதே கணத்தில், பாப் அப் விண்டோ மூலமும் தெரிந்து கொள்ளலாம். 


8. Snapmail: 

இதுவும் ஒரு குரோம் எக்ஸ்டன்ஷன் செயலிதான். இதனை அமைத்துவிட்டால், நம்முடைய ஜிமெயிலில் உள்ள "ண்ஞுணஞீ" பட்டன் அருகே, இன்னொரு பட்டனையும் இணைத்துவிடும். இதனைப் பயன்படுத்தி, தன்னையே அழித்துக் கொள்ளும் வகையில் மெசேஜ் அனுப்ப முடியும். இந்த பட்டன், உங்கள் மெசேஜைச் சுருக்கி, அதனைப் பெறுபவருக்கு, அதைத் திறந்து படிக்க, லிங்க் ஒன்றை அனுப்புகிறது. 

அஞ்சலைப் பெறுபவர், அந்த லிங்க்கில் கிளிக் செய்து, திறந்தவுடன், அந்த மெசேஜ் 60 விநாடிகளில் தன்னை அழித்துக் கொள்ளும் என்று அவருக்குத் தெரிவிக்கிறது. பின்னர், தன்னை அழித்துக் கொள்கிறது. தற்போதைக்கு இந்த ஸ்நாப்மெயில், டெக்ஸ்ட்டை மட்டுமே இவ்வாறு அழிக்கிறது.


9.Gmail Offline: 

இணைய இணைப்பு இல்லாத நிலையிலும், நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பயன்படுத்த இந்த புரோகிராம் வசதி அளிக்கிறது. இதன் மூலம், நீங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சலை, இணைய இணைப்பிற்கான செலவின்றி தயாரிக்க முடிகிறது. பின்னர், இணைய இணைப்பினை ஏற்படுத்தி, இவ்வாறு தயாரித்த அஞ்சல்கள் அனைத்தையும், மொத்தமாக அனுப்பிக் கொள்ளலாம். 


10.Giphy 

மிகப் பிரபலமான எஐஊ தேடல் நிறுவனம் தயாரித்து அளிக்கும் குரோம் பிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம். இதன் எஐஊ தேடல் திறனை, நேரடியாக, உங்கள் ஜிமெயில் செயல்பாட்டில் இணைத்து தருகிறது. 

இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன், ஒரு சிறிய வானவில் போன்ற எடிணீடதூ ஐகான் காட்டப்படுகிறது. இதன் மூலம், உங்கள் அஞ்சல்களில், உங்களுக்குப் பிடித்த ஐகான்களை இணைக்க இயலும்.


11. Dropbox for Gmail: 

ஜிமெயிலின் "Compose" பட்டன் அருகே ஈணூணிணீஞணிது பட்டன் ஒன்றை, இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் அமைக்கிறது. இதன் மூலம் ஒரு மின் அஞ்சலில், Dropbox லிங்க்கினை இணைக்க முடிகிறது. இதனால், உங்கள் இன்பாக்ஸில் பெரிய பைல்களை இணைத்து, அதற்கான இடத்தை வீணாக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. 


12.Boomerang: 

இது ஒரு ப்ளக் இன் புரோகிராம். இதனை குரோம், பயர்பாக்ஸ் அல்லது சபாரி பிரவுசர்களில் பயன்படுத்தலாம். இது பல சின்ன சின்ன வசதிகளை, அஞ்சல் அனுப்புவதில் தருகிறது. மிக முக்கியமான வசதி, அஞ்சல்களைத் தயாரித்து வைத்து, பின் ஒரு நாளில் அனுப்பும் வசதியாகும்.


13.Find Big Mail 

உங்கள் ஜிமெயில் தளத்தின் இடம் ஏறத்தாழ நிறைந்துவிட்டது என்ற செய்தி உங்களுக்கு வரலாம். பெரும்பாலும், மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைப்பாகக் கொண்டு வந்த அஞ்சல்களே இதற்குக் காரணமாக இருக்கலாம். 

இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம், உங்கள் ஜிமெயில் தளத்தினை ஸ்கேன் செய்து, உங்கள் இன் பாக்ஸில் இருக்கும் மிகப் பெரிய பைல்களைக் கண்டறிந்து காட்டும். அவற்றை உடனடியாக அழிக்கவும் உதவும். இதன் மூலம், உங்கள் இன்பாக்ஸில், காலி இடத்தை எண்ணியவுடன் அதிகப்படுத்தலாம்.

மேலே தரப்பட்டுள்ள புரோகிராம்களை, கூகுளின் தேடல் உதவி கொண்டு தேடிப் பார்த்து, தகுந்த, பாதுகாப்பான இணைய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இன்னும் இது போன்ற சில நகாசு வேலைகளை நமக்காக மேற்கொள்ளக் கூடிய ஆட் ஆன் புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைத் தேடிப் பார்த்து பயன்படுத்தலாம். ஆனால், தேவைப்படாதவற்றைப் பதிவது தவறாகும். அது தேவையற்ற சில தொல்லைகளைத் தரலாம்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes