புழக்கத்துக்கு வரும் 10 ரூபாய் நாணயம்!

மும்பை: பத்து ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட்டுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. 

பத்து ரூபாய் நோட்டுக்கள் அதிகப் புழக்கத்தில் உள்ளதால் குறுகிய காலத்திலேயே சேதமடைமந்து விடுகின்றன. எனவே இதைத் தடுக்க பத்து ரூபாயை நாணய வடிவில் அச்சடித்துள்ளது. 

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த நாணயங்கள் 27 மில்லிமீட்டர் விட்டமும் 7.71 கிராம் எடையும் கொண்டவை. வெண்கலம், செம்பு, அலுமினியம், நிக்கல் ஆகிய உலோகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தின் முன்புறம் 2 குறுக்குக் கோடுகளால் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மத்தியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் 'சத்யமேவ ஜெயதே' என்ற இந்தி வாசகமும் இடம் பெற்றுள்ளது. 

நாணயத்தின் பின்புறத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை வலியுறுத்தும், ஒரே உடலில் 4 தலைகள் இருப்பது போன்ற சித்திரம் இடம் பெற்றுள்ளது. மேலும் பத்து ரூபாய் என்ற எழுத்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. 

பத்து ரூபாய் நாணயத்தை இந்திய நாணயத்துறை ஏற்கனவே அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்தது. ஆனால் அவை மிகக் குறைந்த அளவே புழக்கத்தில் இருந்தன. 

சரியாக பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் முழு அளவில் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது ரிசர்வ் வங்கி.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes