நிதி நெருக்கடி அமெரிக்காவில் 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 64 வங்கிகள் திவாலாகியுள்ளன.

சராசரியாக மாதத்துக்கு 9 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. சர்வதேச பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா முழுமையாகச் சிக்கித் தவிப்பதையே இது காட்டுகிறது. இதில் இருந்த மீள அமெரிக்காவுக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க வங்கிகளில் கடந்த ஆண்டே நிதி நெருக்கடி தலை தூக்கத் தொடங்கிவிட்டது. 2008-ம் ஆண்டில் 25 வங்கிகள் திவாலானதாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை இப்போதே இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. ஜூலை மாதத்தில் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செக்யூரிட்டி வங்கியின் கிளைகளாகும்.

இந்த வங்கிகளின் பெரும்பாலவைகளின் மொத்த சொத்து மதிப்புக்கும் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி மிகவும் குறைந்து விட்டது. இதனால் சொத்துகளை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன.

கிராம அளவில் செயல்பட்டு வந்த வாட்டர்போர்டு கிராம வங்கியும் நிதிநெருக்கடியின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

மிகப் பெரிய வங்கிகளான சிட்டி குரூப், கோல்ட்மென் ஆகியவை மற்றுமே கடைசி காலாண்டு முடிவில் குறைந்த அளவு லாபத்துடன் செயல்பட்டுள்ளன. சிறிய மட்டும் வட்டார அளவில் செயல்பட்டு வந்த வங்கிகள் அனைத்து நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தை சந்தித்துள்ளன.

இதனால் வரும் காலத்தில் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும், பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என்றும் தெரிகிறது. அமெரிக்காவில் நிலை இவ்வளவு மோசமாக இருந்தாலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வங்கிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிகளின் லாபமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. சேமிப்பு சார்ந்த இந்தியப் பொருளாதாரம் தான் இதற்கு முக்கியக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes