விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு பொறுப்பாளராக இருந்த ரகு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் வவுனியா முகாமில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
32 வயதான தேவகுமாரன் என்னும் ரகு பிரபாகரனின் பாதுகாப்புக்கான முக்கிய பொறுப்பாளராக பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது.
வன்னியில் நடைபெற்ற போரின்போது அவர் மக்களுடன் கலந்து முகாமில் வசித்து வந்ததாக போலீஸôர் தெரிவித்துள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment