சாம்சங் அமைக்கும் புதிய தொழிற்சாலை

மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சாம்சங் நிறுவனம், மொபைல் போன்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்றை, சென்ற வாரம் வியட்நாம் நாட்டில் அமைத்திட, பூர்வாங்கப் பணியினைத் தொடங்கியது. 

இதன் திட்ட மதிப்பீடு 200 கோடி டாலர். படிப்படியாக இந்த ஆலை அமைக்கப்படும் நிலையிலேயே, மொபைல் போன் தயாரிப்பு தொடங்கப்படும். 2015 ஆம் ஆண்டில் முழுமை அடையும் போது, இங்கு ஆண்டுக்கு, 12 கோடி மொபைல் போன்கள் தயாரிக்கப்படும். 

ஏற்கனவே இதே அளவில் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை வியட்நாமில் சாம்சங் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes