ஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4


சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன், வரும் ஏப்ரல் 24ல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்ற மாதம் நியூயார்க் நகரில், இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில், பல நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 

சாம்சங் நிறுவனத்திற்கு முக்கிய ஒரு சந்தையாக இந்தியா விளங்குகிறது. விலையைப் பொறுத்தவரை ரூ.40,000 என்ற அளவில் இருக்கலாம். 

பனி படர்ந்த கருப்பு மற்றும் வெள்ளை என இரு மாடல்களில் இது கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போனுக்குப் போட்டியாக உள்ள, எச்.டி.சி. நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ரூ. 42,900 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 

இதற்கு முன்னர் வந்த காலக்ஸி எஸ்3 ஸ்மார்ட் போனுடன் ஒப்பிடுகையில், இது முற்றிலும் புதிய போனாக இருக்காது. 

முக்கியமான சில செயல்முறைகளில், அதற்கான பொருட் களில் உயர்நிலையில் உள்ளவை இதில் இணைக்கப்பட்டுள்ளன. 

ஆண்ட்ராய்ட் 4.1 இருந்த இடத்தில் ஆண்ட்ராய்ட் 4.2.2 தரப்படுகிறது. ஸ்நாப் ட்ரேகன் எஸ் 4 ப்ராசசருக்குப் பதிலாக, 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் எக்ஸைனோஸ் ப்ராசசர் உள்ளது. 

ராம் நினைவகம் 1 ஜிபியிலிருந்து 2 ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4.8 அங்குல கொரில்லா கிளாஸ் 2, ஐந்து அங்குல கொரில்லா கிளாஸ் 3 ஆக டிஸ்பிளே திரை உள்ளது. 

இதில் ஸ்டோரேஜ் வசதி 64 ஜிபி கொண்ட மாடலும் கிடைக்கிறது. 8 எம்பி / 1.9 எம்பி கேமராக்களுக்குப் பதிலாக, 13 எம்.பி/2 எம்.பி திறன் கொண்ட கேமராக்கள் இருக்கின்றன. 

2100 mAh திறன் கொண்ட பேட்டரிக்குப் பதிலாக, 2,600 mAh திறன் பேட்டரி இடம் பெறுகிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes