2009ல் 7 கோடியே 10 லட்சம் இன்டர்நெட் சந்தாதாரர்கள்

சென்ற 2009 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் இன்டர்நெட் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 10 லட்சமாக இருந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 42% கூடுதலாகும்.

மலிவான விலையில் கம்ப்யூட்டர் சாதனங்களும், குறைவான கட்டணத்தில் பிராட்பேண்ட் இணைப்பு திட்டங்களும் இன்டர்நெட் பயன்பாட்டில் இந்த கூடுதலைத் தந்துள்ளன.

நகரங்களில் ஆங்கிலம் பயன்படுத்தத் தெரிந்த ஐந்து பேரில் நான்கு பேர் இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வு 19 ஆயிரம் வீடுகள், 68 ஆயிரம் தனி நபர்கள் மற்றும் 500 இன்டர்நெட் மையங்களில் எடுக்கப்பட்டது.

இன்டர்நெட் வளர்ச்சியில் ரூ.20,000 அளவில் கிடைக்கக் கூடிய நெட்புக் கம்ப்யூட்டர்கள் பெரிய அளவில் பங்கேற்றதாகவும் தெரியப்பட்டுள்ளது. டெல், எச்.பி., ஏசர், எச்.சி.எல்., மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங்கள் நெட்புக் கம்ப்யூட்டர்களை தயாரித்து வழங்கி வருகின்றன.

இந்த ஆண்டு 3 லட்சத்து 25 ஆயிரம் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009–10ல் கம்ப்யூட்டர் விற்பனை 73 லட்சமாக உள்ளது. இன்டர்நெட் வளர்ச்சி யினால்,சொந்த இடங்களில் தங்களின் கம்ப்யூட்டர் வழியாகவே இன்டர்நெட் பயன்பாட்டினை அனைவரும் மேற்கொள்வதால், இன்டர்நெட் மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

2006 ஆம் ஆண்டில் 2,35,000 ஆக இருந்த இன்டர்நெட் மையங்களின் எண்ணிக்கை, 2009ல் 1,80,000 ஆகக் குறைந்துள்ளது. இன்டர்நெட் மையங்களின் செயல்பாட்டிற்கான விதிமுறைகள், கட்டணச் சலுகை ஆகியன குறித்து அரசு தீவிரமாக சிந்தித்தால், இந்த மையங்கள் நன்றாகச் செயல்பட வாய்ப்புகள் உள்ளன.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes