மூடப்பட்டது மோட்டாரோலா


பன்னாட்டளவில், மொபைல் போன் விற்பனையில் இயங்கி வரும் மோட்டாரோலா நிறுவனம், இந்தியாவில் தன் வர்த்தகத்தினை மூடி விட்டது. இந்தியாவில் தன் இணைய தளத்தை முடிவிற்குக் கொண்டு வந்தது. 

சென்ற ஆகஸ்ட் மாதம், தான் இனி எந்த புதிய மொபைல் மாடலையும் இந்தியாவிற்குக் கொண்டு வரப் போவதில்லை என, இந்நிறுவனம் அறிவித்தது. 

இருக்கின்ற மொபைல் போன்கள் விற்பனையாகும் வரை தன் வர்த்தகம் நீடிக்கும் எனவும் அறிவித்தது.

மொபைல் போன் வர்த்தகத்தில், ஆசியா கண்டத்தில் மட்டுமின்றி, உலக அளவில், இந்தியா மிகப் பெரிய அளவில் வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

பல பன்னாட்டு நிறுவனங்கள், இன்னும் எந்த அளவில் தங்கள் வர்த்தகத்தில் விரிவாக்கத்தினை மேற்கொள்ளலாம் என்று திட்டமிடும் நேரத்தில், இந்தியாவில் தன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளும் முதல் பன்னாட்டு நிறுவனமாக, மோட்டாரோலா உள்ளது. 

மோட்டோ ரேசர் என்ற மொபைல் மாடல் மூலம், 2005 ஆம் ஆண்டில், மோட்டாரோலா நிறுவனம், நல்ல வர்த்தகத்தினை மேற்கொண்டது. 

ஆனால், அதன் பின்னர், அந்த அளவிற்கு ஆரவாரத்தைத் தர இயலவில்லை. 2009ல் தன் விநியோகஸ்தர்கள் கட்டமைப்பினை மூடியது.

தற்போது சந்தையில், மோட்டாரோலா நிறுவன மொபைல் போன்கள் அவ்வளவாகக் காணப்படவில்லை. 

தற்போது இந்நிறுவனத்தின் மொபைல் போன்களைக் கொண்டிருப்பவர்கள், தொடர்ந்து யாரிடம் சர்வீஸ் பெறுவது என விழித்துக் கொண்டுள்ளனர்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes