நோக்கியாவின் சேவை மையம்

தன் வாடிக்கையாளர் களுக்குத் தொடர்ந்து நல்ல சேவையினை வழங்கிட, நோக்கியா நிறுவனம் அண்மையில், சென்னையில் நோக்கியா கேர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் என்ற மையத்தைத் தொடங்கியுள்ளது. 

இந்த மையத்தில் நோக்கியாவின் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் போன்களுக்கான சேவையினை நேரடியாகப் பெற்று அனுபவிக்கலாம். நோக்கியா அண்மையில் கவனம் செலுத்தும் மியூசிக், மெசேஜிங், மேப்ஸ் மற்றும் கேம்ஸ் ஆகியவை குறித்த தங்கள் ஐயங்களை நீக்கிக் கொள்ளலாம். 

அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில்போன் பழுது பார்த்தல், சேவை வழங்குதல், கற்றுக் கொள்ளுதல் மற்றும் சேவை அனுபவம் பெறுதல் எனப் பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு இலவச இன்டர்நெட் பிரவுசிங் வசதி செய்து தரப்பட்டுள்ளது. நோக்கியா வழங்கும் அண்மைக் காலத்திய வசதிகள் குறித்து அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. 

மொபைல் போன்களுக்கான சாப்ட்வேர் வசதி, துணை சாதனங்கள் விற்பனையும் இங்கு உண்டு.  இவை அனைத்திற்குமான நவீன சாதனங்களை, இங்கு நோக்கியா கொண்டு வந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தினைத் தரும் என இதன் தலைவர் சுதிர் கோலி தெரிவித்துள்ளார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes