ரிலையன்ஸ் பெரும் சாம்சங் 4G தொழில்நுட்பம்


கூடுதல் வேகத்தில் செயல்படக்கூடிய 4ஜி அலைவரிசையினை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வர, சாம்சங் நிறுவனத்தின், எல்.டி.இ. தொழில் நுட்பத்தினை, ரிலையன்ஸ் வாங்குகிறது. 

அத்துடன், ரூ.5,500 விலையில் தொடக்க நிலை 4ஜி மொபைல் போன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வடிவமைத்து வழங்கவும் சாம்சங் ஒத்துக் கொண்டுள்ளது. 

இந்த மொபைல் போன்கள், ரிலையன்ஸ் டேட்டா மற்றும் வாய்ஸ் திட்டங்களில் மட்டுமே செயல்படும். இந்த திட்டங்களையும் தொடக்க நிலையில் ரூ.100க்கு வழங்க ரிலையன்ஸ் திட்டமிடுகிறது. 

தற்போது இதே விலையில் 3ஜி மொபைல் போன் சந்தையில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தினால், சாம்சங் நிறுவனம் இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில் வலுவாகக் கால் ஊன்றும் வாய்ப்புகள் பெருகும். மொபைல் போன் விற்பனையைப் பொறுத்தவரை, இந்தியா, உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இங்கு தன் பங்கினை அதிகப்படுத்துவதன் மூலம், அமெரிக்க மக்களிடம் ஆப்பிள் நிறுவனப் போன்களுக்கு எதிராகத் தன் போன்களை நிறுத்த முடியும் என சாம்சங் திட்டமிடுகிறது. 

4ஜி அலைக்கற்றை வரிசையில், மொபைல் போன் தொடர்புகளை ரிலையன்ஸ் வழங்க இருப்பதை, மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். 

குறைந்த விலையிலான மொபைல் போனுடனும், குறைந்த கட்டணத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் சேவையுடனும், 4ஜி அறிமுகப்படுத்தும் நிலையில், இதன் தாக்கம் நம் மக்களிடையே அதிகமாக இருக்கும். 

மற்ற மொபைல் போன் சேவை நிறுவனங்கள் இதற்கு ஈடாக ஏதேனும் செய்திட வேண்டும். இல்லையேல் அவர்கள் மொபைல் சேவை சந்தையில் தங்கள் பங்கினை இழக்க வேண்டியதிருக்கும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes