இந்திய மண்ணில் நோக்கியா பெற்ற இடம்

இந்தியாவில், மொபைல் போன்களைப் பொறுத்தவரை, மக்கள் நம்பிக்கையை அதிகம் பெற்ற முதல் நிறுவனமாக நோக்கியா இடம் பெற்றுள்ளது.

ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (TRA Trust Research Advisory) என்ற நிறுவனம் அண்மையில், இந்தியாவில், எந்த மொபைல் நிறுவனம் மக்களிடையே அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ளது (“Brand Trust Report, India Study 2011) என்ற ஒரு கணிப்பை மேற்கொண்டது.

16,000 மொபைல் போன் மாடல்கள் குறித்து ஒன்பது நகரங்களில், 2310 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை டாட்டா மற்றும் சோனி நிறுவனங்கள் பெற்றுள்ளன.

அடுத்த இடங்கள் எல்.ஜி. மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ளன.

இது விற்பனையை அல்லது போன்களின் திறனைச் சார்ந்தது அல்ல. மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அறிவது.

எனவே அந்த நம்பிக்கையை 61 தன்மைகள் கொண்டு மக்களிடம் சோதனை நடத்தப்பட்டது என இந்த ஆய்வினை மேற்கொண்ட ட்ரா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சந்திர மௌலி தெரிவித்தார்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes