செய்திகள் அனுப்புவதில் வாட்ஸ் அப் முன்னிலை

உடனடியாக செய்திகளை அனுப்புவதற்கு, இந்தியாவில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் அப்ளிகேஷன்களின் சந்தையில், பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் 52% இடம் பெற்றுள்ளது. 

அடுத்த நிலையில், பேஸ்புக் மெசஞ்சர், அடுத்து ஸ்கைப் மற்றும் வி சேட் (WeChat) இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து, மிகக் குறைவான இடத்தை வைபர் மற்றும் லைன் (Viber / Line) பெற்றுள்ளன.

 இந்த தகவல்களை, உலக அளவில் இவற்றின் பயன்பாட்டினைக் கவனித்து வரும் குளோபல் வெப் இண்டெக்ஸ் (GlobalWebIndex (GWI)) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கிடையே, வாட்ஸ் அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 334% உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில், வி சேட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2356% அதிகரித்துள்ளது. பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் ஸ்கைப் முறையே 192% மற்றும் 190% உயர்ந்தன. 

விசேட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, உலக அளவில், சென்ற ஆண்டில், மிக அதிகமாக வளர்ந்துள்ளது. உலக அளவில், இணையம் பயன்படுத்துவோரில்ல் 23% பேர் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதில் தரப்படும் இலவச கூடுதல் வசதிகளே இதற்குக் காரணம்.

மொபைல் சாதனங்கள் வழியாக, உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வது, தற்போது இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. இவர்கள், சமூக இணைய தளங்களை, இந்த வேலைக்குப் பயன்படுத்துவதனைப் புறக்கணித்து வருகின்றனர். இந்த வகையில் மொபைல் சாதனங்களின் பயன்பாடு 113% அதிகரித்துள்ளதாக, மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். இணையம் பயன்படுத்துவோரில், 79% பேர் ஸ்மார்ட் போன்களை வைத்துள்ளனர். இவர்களில் 40% பேர் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷன்களை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.


1 comments :

Anonymous said...

அருமையான தகவல் சகோ ......

மேலும் ஆன்ராய்டு பயனர்களுக்கு 150 உடனடி இலவச ரீசாஜ்...!!! க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes