மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி

சென்ற ஏப்ரல் மாதம், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்திலான, மொபைல்போன் சேவையை பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 65 லட்சம் அதிகரித்துள்ளது.

ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்இதன் மூலம், நாட்டில் இச்சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 67 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில், மொபைல் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம். என இருவகை தொழில்நுட்பத்தில், மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. இதில், ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர் எண்ணிக்கையே சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில், மொபைல் போன் சேவையில் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், மிகவும் அதிகபட்சமாக, 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த மொபைல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18.33 கோடியாக உயர்ந்துள்ளது.

மொபைல்போன் சேவையில், இரண்டாவது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், அதன் புதிய வாடிக்கையாளர்கள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிடவில்லை.

வோடபோன் இந்தியா மதிப்பீட்டு மாதத்தில், மொபைல் போன் சேவையில், மூன்றாவது இடத்தில் உள்ள, வோடபோன் இந்தியா நிறுவனம், 8 லட்சத்து 20 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 15 கோடியே 13 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதே மாதத்தில், மொபைல் சேவையில், நான்காவது இடம் வகிக்கும், ஐடியா செல்லுலார் நிறுவனம், 14 லட்சம் 90 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டது.

இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 கோடியே 42 லட்சமாக உயர்ந்துள்ளது.டெலினார் இந்தியா நிறுவனத்தின், வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 லட்சத்து 20 ஆயிரம் உயர்ந்து, 4 கோடியே 36 லட்சமாக அதிகரித்துள்ளது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes