ஜுலை - செப்டம்பரில் மால்வேர் அட்டகாசம்

சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில், மூன்றில் ஒரு பங்கினர், ஏதேனும் ஒரு மால்வேர் வைரஸ் புரோகிராமினால், பாதிக்கப்பட்டதாக, காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

காஸ்பெர்ஸ்கியின் சோதனைச்சாலையில், 2 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 308 மால்வேர் புரோகிராம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 33.8 சதவீத இணைய பயனாளர்கள், இவற்றால் பாதிக்கப்பட்டனர். 


இந்த வைரஸ் புரோகிராம்கள் அனைத்துமே, பயனாளர்களின் செயல்பாட்டினாலேயே, அவர்களின் கம்ப்யூட்டர்களில் பரவின. 

இவற்றைப் பரப்பிய டிஜிட்டல் குற்றவாளிகள், ஒரு நல்ல புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள் என்று வாடிக்கையாளர்களை ஏமாற்றி, இவற்றை பரப்பியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தவகை புரோகிராம்கள், பெரும்பாலும் வங்கி சார்ந்த தகவல்களைத் திருடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன. 

இந்த புரோகிராம்கள் பரவியதால், உலக அளவில், இணையத்தைப் பயன்படுத்துவதால், அதிக அளவில் ஆபத்தினைச் சந்திக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 16 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. 

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், 52 சதவீதம் பேர், யு.எஸ்.பி., சி.டி., மற்றும் பிற ஆப் லைன் பயன்பாட்டின் மூலமாகவும், மால்வேர் புரோகிராம்களைப் பெற்றனர்.

இந்த டிஜிட்டல் குற்றவாளிகள், மால்வேர் புரோகிராம்களைப் பரப்புவதற்குப் புதிய பல வழிகளைத் தொடர்ந்து கண்டறிந்து வருவதாலேயே, இவை அதிக அளவில் பரவி வருகின்றன.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரிப்பதில், முன்னணியில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி நிறுவனத்தின், கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாலை வெளியிட்டவை ஆகும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes