அடி பணிந்த மைக்ரோசாப்ட்

சென்ற வாரம், தன்னுடைய நிறுவனத் தயாரிப்புகளின் இரகசியங்களைத் திருடிய ஒருவரைக் கண்டுபிடிக்க, மைக்ரோசாப்ட் அதன் சர்வர்களில் உள்ள தன் மின்னஞ்சல் வாடிக்கையாளர்களின் கடிதங்களைப் படித்த செய்தி வெளியானது. 

இதனைப் பன்னா டெங்கும் உள்ள பெரும்பான்மையான ஹாட்மெயில் வாடிக்கையாளர்கள், மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செய்கை, அதன் நம்பகத்தன்மைக்கு எதிரானது என்றும், அதன் சர்வர்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களைப் படித்தறிவது நம்பிக்கைத் துரோகம் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனமோ, அதற்கான ஒப்புதலை, மின் அஞ்சல் கணக்கு தொடங்கும்போதே வாடிக்கையாளர்கள் தந்துள்ளனர் என்று கூறியது. 

நாம் இமெயில் அக்கவுண்ட் தொடங்குகையில், ஒத்துக் கொள்ளும் மிகப் பெரிய ஒப்பந்தத்தில் இந்த பிரிவும் இருந்ததனைப் பின்னர் அனைவரும் தெரிந்து கொண்டனர்.

இருப்பினும் வாடிக்கையாளர்களின் பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து, இனிமேல், தங்கள் சர்வர்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ள, நிறுவனத் தகவல்களை யாரேனும் திருடு கிறார்கள் என்று தெரிய வந்தால், சர்வர்களில் உள்ள தகவல்களை மைக்ரோசாப்ட் தெரிந்து கொள்ள முயற்சிக்காது எனவும், திருட்டு குறித்து காவல்துறைக்குத் தெரிவித்து, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை நிறுவனத்தின் சட்டம் மற்றும் நிர்வாகத் திற்கான பிரிவின் துணைத் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

வருங்காலத்தில், வாடிக்கையாளர்களுடன் மேற்கொள்ளப்படும் மின் அஞ்சல் சேவை குறித்த ஒப்பந்தத்தில் இதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes