விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள்


விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகப்படுத்தியவுடன், மைக்ரோசாப்ட் பழைய சிஸ்டங்களுடன் கம்ப்யூட்டர் வடிவமைப்பவர் களுக்கு, இறுதி நாளினை நிர்ணயம் செய்தது. 

அதற்குப் பின்னர், அந்நிறுவனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான், கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட வேண்டும் என்பது ஒப்பந்தம். 

ஆனால், விண்டோஸ் 8 மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. விண்டோஸ் 7 தொடர்ந்து கம்ப்யூட்டர்களில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் இடம் பெற்றது. 

ஆனால், தன் விண்டோஸ் 8.1 மூலம் சிக்கல்களை ஓரளவுக்குத் தீர்த்து வைத்த மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான இறுதி நாளை அறிவித்தது. பின்னர், அதனை வாபஸ் பெற்றது. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு, பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், லேப்டாப் கம்ப்யூட்டர்களையும் வடிவமைத்து விற்பனை செய்து வரும் ஹ்யூலட் பேக்கார்ட் (எச்.பி.) நிறுவனம், மக்கள் தொடர்ந்து விண்டோஸ் 7 சிஸ்டத்தினையே விரும்புவதால், மீண்டும் விண்டோஸ் 7 சிஸ்டம் பதிக்கப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்க முன் வந்து வழங்கியும் வருகிறது. 

""விரும்பும் மக்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தினை கைவிட்டு விடவில்லை. அதனைக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, விண் 8 பதிந்து தருகிறோம்'' என அறிவித்துள்ளது. 

பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை சரிந்து வருவதால், மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதனை மிகக் கண்டிப்புடன் கண்டு கொள்ளவில்லை. 

ஆனால், மீண்டும், விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குவதை நிறுத்தச் சொல்லி, மைக்ரோசாப்ட் அறிவுறுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes