பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

பி.எஸ்.என்.எல். தரை வழி தொலைபேசியுடன் இணைந்த இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பணி நிறைவு பெற்றோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு இதுவரை கட்டணத்தில் 10% சலுகை தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. 

இதனை 5% ஆகக் குறைத்து அறிவிப்பினை பி.எஸ்.என்.எல். வழங்கியுள்ளது. இது 01-10-2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. 01/11/2015 முதல் வழங்கப்படும் பில்லில் இது காட்டப்படும். 

மேலும் விபரங்கள் தேவைப்படுவோர், கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1500 ஐத் தொடர்பு கொண்டு அறியலாம். வேறு நெட்வொர்க் தொலைபேசிகளிலிருந்து தொடர்பு கொள்வோர் 18003451500 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். 

மஹாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலைச் சுற்றி, இலவச வை பி இணைய இணைப்பினை பி.எஸ்.என்.எல். வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதத்தில், 3 நாட்கள், நாளொன்றுக்கு 30 நிமிடங்கள், இலவசமாக இணைய இணைப்பினை, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெற்றுப் பயன்படுத்தலாம். 30 நிமிடத்திற்கு மேலாகவும், இணைய இணைப்பு தேவைப்படுவோர், அதற்கான கூப்பன்களை, கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தலாம்.

இதற்கிடையே, சென்னையில், பத்து தொலைபேசி நிலையங்கள் சார்ந்த தரைவழி தொலைபேசிகள், அடுத்த மேம்படுத்த நிலை வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுவிட்டன என்றும், இதன் மூலம், மிகச் சிறப்பான இணைப்பினை, இந்த தொலைபேசி சந்தாதாரர்கள் (55,204) பெறுவார்கள் என்றும் பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. 

அடுத்தபடியாக, மேலும் 40 நிலையங்களில் இந்த மேம்படுத்தப்படும் பணி மேற்கொள்ளப்படும் என்றும், அதன் மூலம் 1,75,000 சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes