வாட்ஸ் அப் - உங்கள் செய்தி படிக்கப்பட்டதா?

அதிக எண்ணிக்கையில் மக்களால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சராக வாட்ஸ் அப் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. 

வாட்ஸ் அப் தற்போது புதிய வசதி ஒன்றை அதன் பயனாளர்களுக்கு அளிக்கிறது. இதில் செய்தியை அனுப்பியவுடன், செய்தி அனுப்பப்பட்டது, நம் செய்தியை அடுத்து கிரே கலரில் ஒரு டிக் மூலம் காட்டப்படும். 

அனுப்பியவரின் ஸ்மார்ட் போனை அடைந்தவுடன், அதில் இரண்டு டிக் அடையாளங்கள் காட்டப்படும்.

தற்போது, செய்தியை அவர் படித்தவுடன், இந்த இரண்டு டிக் அடையாளங்களும் நீல நிறத்தில் மாறும். 

இதன் மூலம், நீங்கள் செய்தி அனுப்பும் நபர், உங்கள் மீதும் நீங்கள் அனுப்பும் செய்தி மீதும் அக்கறை உள்ளவரா என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

ஏற்கனவே பலர், இரண்டு டிக் மார்க் இருந்தாலே, யாருக்காக மெசேஜ் அனுப்பப்பட்டதோ, அவர் அதனைப் படித்துவிட்டார் என்று எண்ணி வந்தனர். இது தவறு என்று வாட்ஸ் அப் தன் வலைமனையில் தெரிவித்துள்ளது. 

மெசேஜ் பெறுபவரின் போனைச் சென்று அடைந்ததனைத் தான் இது குறிக்கிறது. எனவே தான், அவர் படித்துவிட்டார் என்பதனை, இந்த இரு டிக் அடையாளங்களும் நீலக் கலரில் மாறுவதன் மூலம் காட்டப்படுகிறது.


1 comments :

Anonymous said...

நல்ல தகவல் சகோ

இலவச 150 ரூ ரீசார்ஜ் க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes