இணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., தன் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான வசதி ஒன்றை அளிக்கிறது. 

இந்நிறுவனத்தின் மொபைல் போன் இணைப்பு கொண்டிருப்பவர்கள், தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், பேஸ்புக் தளத்தைத் தொடர்பு கொள்ள முடியும் மூன்று நாட்களுக்கு ரூ.4, வாரத்திற்கு ரூ.10 மற்றும் மாதத்திற்கு ரூ.20 இதற்கென கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

இதற்கென, பி.எஸ்.என்.எல். U2opia Mobile என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

இந்த வசதி Unstructured Supplementary Service Data (USSD) என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இது கிடைக்கிறது. 

USSD தொழில் நுட்பத்தினை, முன் கூட்டியே பணம் செலுத்தி, பதில் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தலாம். இடம் சார்ந்த தகவல் வசதிகளைப் பெறலாம். 

மெனு வழங்கி அதன் பிரிவுகளுக்கேற்ப வசதிகளைத் தரலாம். தற்போது தொலை தொடர்பு துறையில் இயங்கும் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்பப் பயன்படுத்தி வருகின்றனர். 

பி.எஸ்.என்.எல். ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தினால், இதன் வாடிக்கையாளர்கள், பேஸ்புக் தளத்தினை, தங்கள் அக்கவுண்ட்டில், இணைய இணைப்பு பெறாவிடினும் அணுக முடியும். 

மெசேஜ்களை அமைக்க, காண இயலும். நண்பர்கள் விடுத்துள்ள கேள்வி மற்றும் வேண்டுகோள்களுக்குப் பதில் அளிக்க முடியும். தங்கள் நண்பர்களின் பக்கங்களில் தகவல்கள, செய்திகளை எழுத முடியும். 

பிறந்த நாள் வாழ்த்து குறித்த தகவல்களைப் பெற்று, அதற்கேற்ப வாழ்த்துகளை அனுப்ப முடியும்.

இந்த வசதியினை வாடிக்கையாளர்களுக்கு முதல் முதலாக வழங்குவதன் மூலம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று இந்நிறுவன இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார். 

தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்பும் பல கோடி மக்களுக்கு இந்த சேவையும் வசதியும் உண்மையிலேயே ஒரு பெரிய உதவி என்று யுடோபியா மொபைல் நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes