செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 எஸ்


ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பெருமைக்குரிய மொபைல் போனாகிய ஐபோன் 5 எஸ், வரும் செப்டம்பர் 10ல் வெளியிடப்படக் கூடும் என்று தெரிய வந்துள்ளது. 

இத்துடன், குறைவான விலையிடப்பட்ட ஐபோன் மாடல் ஒன்றும் வெளியாகும் எனத் தெரிகிறது. இது ஐபோன் 5 சி என அழைக்கப்படலாம். 

ஐபோன் 5 எஸ் மாடலில், அதன் ஹோம் பட்டனில், கை விரல் ரேகைக்கான ஸ்கேனர் அமைக்கப்படலாம். இதன் கேமரா விநாடிக்கு 120 பிரேம்களைப் பதியும் வேகம் கொண்டதாக இருக்கும். 

தற்போதைய ஐபோன் கேமராக்கள், விநாடிக்கு 30 பிரேம் பதியும் திறன் கொண்டுள்ளன. இதனால், புதிய போனைக் கொண்டு ஸ்லோ மோஷன் திரைப்படங்களைக் கூடப் பதியலாம்.

ஆப்பிள் ஐபோன் சி, விலை மலிவான பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இதன் விலையைக் குறைக்க முடிகிறது. 

தற்போது விலை குறைந்த மற்றும் மத்திய நிலையில் விலையிட்டுள்ள, ஸ்மார்ட் போன்களே, மொபைல் சந்தையில் கோலோச்சிக் கொண்டுள்ளன. 

இதனாலேயே, குறைவான விலையில் மாடல் ஒன்றைக் கொண்டு வருவதில் ஆப்பிள் குறியாய் உள்ளது. 

இந்த விலை குறைவான மாடல் மூலம், மொபைல் சந்தையில், தன்னுடைய ஸ்மார்ட் போனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது. 

இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால், நாம் காத்திருந்து இந்த இரண்டு மாடல்களும் என்ன தகவல்களைக் கொண்டு வர இருக்கின்றன என்று பார்க்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes