இந்தியாவில் அமேசான் இந்தியா வர்த்தக தளம்


இணைய தளம் வழி சில்லரை வர்த்தகத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வரும் அமேஸான் டாட் காம், இந்தியாவில் தன் பிரிவினைத் தொடங்கி உள்ளது (https://www.amazon.in/). 

தொடக்கத்தில் 70 லட்சம் நூல்கள், 12 ஆயிரம் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விற்பனைக்கு இருந்தன. தொடர்ந்து இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள், கேமராக்கள் அடுத்து வர இருக்கின்றன.

ஏற்கனவே, இணையதளம் வழி வர்த்தகத்தில் இயங்கி வரும் மற்ற இந்திய நிறுவனங்களுக்கு இது அதிர்ச்சியை வழங்கியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இயங்கி வரும் Flipkart, Snapdeal (இபே நிறுவனம் இதில் அதிக முதலீடு செய்துள்ளது), Jabong and Indiatimes Shopping போன்ற தளங்கள், சரியான செயல்முறை இன்றி தயங்கி வருகின்றன. 

சென்ற சில வாரங்களாகத் தங்கள் செலவினத்தைக் கட்டுப்படுத்த, Flipkart மற்றும் Jabong ஆகிய இரு தளங்களின் நிறுவனங்களும், தங்களின் ஊழியர் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. அமேஸான் இந்தியா ப்ளிப் கார்ட் நிறுவனத்திற்குத் தான் அதிக சவாலைத் தரும். 

தற்போது இணையவெளி வழியாக, அதிக நூல்களை விற்பனை செய்வது ப்ளிப் கார்ட் நிறுவனம் மட்டுமே. அமேஸான் இந்தியா, அதிக எண்ணிக்கையில் நூல்கள், குறைந்த விலை மற்றும் உடனடி டெலிவரி என்ற வகையில், மேலாதிக்கம் பெறும் வாய்ப்புகள் உள்ளன. 

இந்திய அரசின் சட்டவிதிகள், வெளிநாட்டு நிறுவனம் ஒன்று முழுமையாக முதலீடு செய்து, இணையதளம் வழியாக, சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லை. எனவே, அமேஸான் டாட் காம் தான் எதனையும் கொள்முதல் செய்வதோ, விற்பனை செய்வதோ இல்லை என்கிற ரீதியில் தந்திரத்தைக் கையாள்கிறது. 

பொருட்களை, தன் இணையதளத்தில் பதிந்து, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே விற்பனை செய்வதாகக் காட் டுகிறது. ஏற்கனவே பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுக் காட்டும் என்ற வர்த்தக இணைய தளத்தினை அமேஸான் டாட் காம் நடத்தி வருகிறது. அதுவும் புதிய வர்த்தக தளத்துடன் இயங்கும்.

இ–காமர்ஸ் எனப்படும், இணைய வர்த்தகத்தில் அமேஸான் இந்தியா டாட் காம், நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இன்டர்நெட் பயன்படுத்துவோர் ஏறத்தாழ 15 கோடியாக இந்தியாவில் உள்ளனர். ஆனால், இணைய தளச் சில்லரை வர்த்தகத்தைப் பயன்படுத்துவோர் மிக மிகக் குறைவே. 

எனவே, அமேஸான் இந்தியா, தன் வர்த்தக வழிகள் மூலமாக நிச்சயம் வெற்றி பெறும். குறிப்பாக பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இளைஞர்களை அமேஸான் இந்தியா இலக்கு வைத்துள்ளது. அமேஸான் இந்தியா, இந்திய இணைய வெளியில் பெரிய அளவில் நூல்களை விற்பனை செய்திடும் தளத்தினை முதன்மையாக அமைக்க இலக்கு வைக்கிறது. 

ஆனால், நூல்களை வாங்குவதில், இந்திய மக்களுக்கு ஆர்வமில்லை என்பதனையும் அமேஸான் உணர்ந் துள்ளது. மற்ற ஒன்பது நாடுகளில் நூல்கள் விற்பனை மூலமே அமேஸான் அதிக வருமானம் ஈட்டி வருகிறது. ஆனால், இந்தியாவில் அது நடக்காது என்றே அனைவரும் கருதுகின்றனர்.

சென்ற 2013 இறுதியில், இணைய தள வர்த்தகம் ரூ. 8,400 கோடி அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இது 100 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமேஸான் இந்தியாவின் பங்கு அதிக அளவில் இருக்கும். கீழே தரப்பட்டுள்ள இதன் சிறப்பம்சங்கள் இதற்கு நிச்சயம் துணையாக இருக்கும். 

உலக அளவில் 20 கோடி வாடிக்கையாளர்களை அமேஸான் கொண்டுள்ளது. இதன் தளங்களில், தங்கள் பொருட்களை விற்பனை செய்திடும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 லட்சம். உலக அளவில் இதன் மொத்த வருமானம் 6,100 கோடி டாலர். இதன் வர்த்தகப் பங்கு 40 சதவீதம். தற்போது 10 நாடுகளில் இதன் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. 178 நாடுகளில் இதன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மொத்த வர்த்தகமும் 30 பிரிவுகளில் பட்டியலிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் கீழ்க்காணும் பொருட்களில் இப்போது இணைய தள வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

விமானப் பயணச் சீட்டு, ட்ரெயின் பயணச் சீட்டு பதிவு, சுற்றுலா மற்றும் விடுதி பதிவு செய்தல், திருமண வரன் பார்த்தல், வேலைக்குப் பதிந்து வைத்தல், ஆடைகள், சார்ந்த சாதனங்கள், ஷூக்கள் விற்பனை, கம்ப்யூட்டர் துணை சாதனங்கள், கடிகாரங்கள், அழகு சாதனப் பொருட்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கான டிக்கட் பதிவு, நூல்கள், பரிசுப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், பெண்களுக்கான உடல் நலம் பராமரிக்கும் சாதனங்கள், குழந்தைகளுக்கான சிறிய அளவிலான ஆடைகள் மற்றும் சார்ந்த சாதனங்கள்.

வரும் காலங்களில் நுகர்@வாருக்கான அனைத்துப் பொருட்களும் இணைய தளங்கள் மூலம் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes