மொபைல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது


மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், தங்களின் மாநிலத்தைவிட்டு, அடுத்த மாநிலத்தில் அவற்றைப் பயன்படுத்துகையில், அதற்கான ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது நீக்கப்படும் என முன்பு அரசு அறிவித்தது.

இதற்கான பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து, மார்ச் மாதம் முதல் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், நாட்டின் எந்த பகுதிக்குச் சென்று ஒருவர் தன் மொபைல் போனைப் பயன்படுத்துகையில், அது உள்ளூர் அழைப்பாகவே கருதப்படும். 

இதுவரை வெளி மாநிலங்களில் இருக்கும்போது அழைப்பு வந்தால், வரும் அழைப்பிற்கு, அழைப்பு பெறுபவரும் கட்டணம் செலுத்த வேண்டும். இனி, இது நீக்கப்படுகிறது. எப்படி, உள்ளூர் அழைப்புகளைப் பெறுபவர், அதற்கெனத் தனிக் கட்டணம் செலுத்தத் தேவையில்லையோ, அதே போல கூடுதல் கட்டணம் செலுத்த தேவை இருக்காது.

இதே போல, ஒருவர் எண்ணை மாற்றாமல், தனக்கு மொபைல் சேவை தரும் நிறுவனத்திற்கு மாறும் வசதியில் உள்ள சில தடைகள் நீக்கப்படுகின்றன. இப்போது ஒருவர் தான் வாங்கியுள்ள இணைப்பு உள்ள இடத்தில் இயங்கும், 

மற்றொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மட்டுமே மாறிக் கொள்ள முடியும். இனி, ஒரு நிறுவனத்திடம் எண் மற்றும் சேவை பெற்ற ஒருவர், வேறு எந்த மாநிலத்திற்கு மாறினாலும், அந்த மாநிலத்தில் அந்த மொபைல் சேவை நிறுவனம் இல்லை என்றாலும், வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes