தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு


ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாறு காணாத வகையில் நேற்று, 24,480 ரூபாயாக உயர்ந்தது.பண்டிகை சீசன் முடிந்த நிலையிலும், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில், தங்கம் விலை, கிராமுக்கு, 38 ரூபாய் உயர்ந்து, 3,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 304 ரூபாய் அதிகரித்து, 24,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

24 காரட், 10 கிராம் சுத்த தங்கம் விலை, 410 ரூபாய் அதிகரித்து, 32,730 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 68.50 ரூபாயிலிருந்து, 70.20 ரூபாய்க்கு விற்பøனாயானது.

சென்ற வெள்ளிக் கிழமை, தங்கம், கிராமுக்கு, 23 ரூபாய் உயர்ந்து, 3,022 ரூபாய்க்கும், சவரனுக்கு, 184 ரூபாய் அதிகரித்து, 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 32,320 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த இரு தினங்களில் மட்டும், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு, 61 ரூபாயும், சவரனுக்கு, 488 ரூபாயும் அதிகரித்துள்ளன. 10 காரட் சுத்த தங்கம் விலை, 660 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதற்கு முன், செப்டம்பர் மாதம் 14ம் தேதி, அதிகபட்சமாக, ஒரு கிராம் தங்கம், 3,041 ரூபாய்க்கும், சவரன், 24,328 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சர்வதேச சந்தையில், கடந்த இரு தினங்களில் மட்டும், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 20 முதல், 30 டாலர் வரை அதிகரித்துள்ளது. 

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை அதிகரித்துள்ளது. மேலும், விண்வெளி சாதனங்கள், விமான உதிரி பாகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில், வெள்ளி பயன்பாடு உயர்ந்துள்ளது. 

இதனால், வெள்ளியில் முதலீடு மேற்கொள்வதும் அதிகரித்து, அதன் விலை உயர வழி வகுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at November 25, 2012 at 8:52 PM said...

.....ம்.... நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes