இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5


ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐ போன் 5, நவம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. 

அமெரிக்காவில் வெளியாகி ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பின்னர் இது இங்கு கிடைக்கிறது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் 100 நாடுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும். 

மிகக் குறைந்த எடையில், மெலிதான அமைப்பில் 4 அங்குல அகலத் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் முந்தைய ஐ போன் 4 ஐக் காட்டிலும் 20% குறைவான எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பன்னாட்டளவில், மிக அதிகமான எண்ணிக்கையில் வேகமான விற்பனையை இந்த போன் பெற்றுள்ளது என ஆப்பிள் நிறுவனத் தலைமை அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். 

இதன் 16 ஜிபி மாடல் ரூ. 45,000, 32 ஜிபி மாடல் ரூ.52,000 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.59,500 என விலையிடப்பட்டுள்ளன. சாம்சங் காலக்ஸி எஸ் 3 மற்றும் எச்.டி.சி. ஒன் எக்ஸ் போன்ற இதற்கு இணையான ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும், கூடுதலாக இது விலையிடப்பட்டிருந்தாலும், பலர் இதனை வாங்கிப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

முன் பதிவு செய்து பெற்று வருகின்றனர். பொதுவாக ஆப்பிள் நிறுவன சாதனங்கள் விற்பனை செய்திடும் கடைகளில் மட்டுமே, ஐ போன் விற்பனை செய்யப்படுவது வழக்கம். 

இம்முறை மற்ற விற்பனை மையங்களிலும் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. 

மேற்கு நாடுகளில் போல் அல்லாமல், இந்தியாவில் ஐபோன் பயன்பாடு குறைவுதான். 

இந்த போன் தரும் சில வசதிகளை (எ.கா. 4ஜி அலைவரிசை) இந்தியாவில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes