பிளாக்பெரி பயன்படுத்துவோரின் ஜிமெயில் சேவையை நிறுத்த கூகுள் முடிவு

மொபைல் போன்களுக்கான ஆன்டிராய்ட் தயாரிக்கும் கூகுள், தற்போது பிளாக்பெரி ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு தனது ஜிமெயில் சேவையை நிறுத்த முடிவு செய்யதுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் இந்த தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைலில் ஜிமெயில் சேவையை கொண்டு வருவதில் கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருவதாகவும், இதில் மேலும் பல முதலீடுகள் செய்ய உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 22ம் தேதி முதல் பிளாக்பெரி பயன்படுத்துபவர்களுக்கு ஜிமெயில் சேவை நிறுத்தப்படும் எனவும், ஏற்கனவே ஜிமெயில் பிரவுசரை டவுன்லோட் செய்து வைத்திருப்பவர்கள் ஜிமெயில் சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes