குறைகிறது பெட்ரோல் விலை

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அடுத்த வாரம் பெட்ரோல் விலையைக் குறைக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அனேகமாக, லிட்டருக்கு 80 பைசா குறைக்கப்படலாம்.

பெட்ரோல் மீதான விலை நிர்வாகக் கட்டுப்பாட்டு முறையை, மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

இதனடிப்படையில், கடந்த வாரம் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 1.80 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில், இது நான்காவது விலை உயர்வாகும்.

தற்போது, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 80 பைசா குறைக்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அடுத்த வாரம், இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும். அப்படி குறைக்கப்பட்டால், 2009ம் ஆண்டு ஜனவரிக்கு பின் நிகழும், முதல் விலை குறைப்பாக இருக்கும்.

வரிகளைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த விலை குறைப்பு, 60 பைசாவாக இருக்கும் என, மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.


1 comments :

middleclassmadhavi at November 12, 2011 at 4:38 PM said...

Aaha!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes