மொபைல் போன்களின் விலையை உயர்த்துகிறது சாம்சங்

ரூ.3000 க்கும் குறைவான விலையில் உள்ள மொபைல் போன்களின் விலையை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

2011-12 ம் ஆண்டு பட்ஜெட்டின்படி ரூ.3000க்கும் கீழாக உள்ள 23 மாடல் மொபைல் போன்களின் விலையை 2-3 சதவீதம் (ரூ.50 முதல் ரூ.400 வரை) உயர்த்த உள்ளதாக சாம்சங் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மொபைல் போன்கள் உள்ளிட்ட 130 பொருட்களின் மீதான கலால் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது.

இதன் காரணமாகவே மொபைல் போன் விலையை உயர்த்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


1 comments :

Admin at March 28, 2011 at 7:40 AM said...

தகவலுக்கு நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes