தமிழில் ஜெய்ஹோ! ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு!!

ஆஸ்கார் விருது வென்ற ஜெய்ஹோ இந்திப்பாடலை தமிழில் உருவாக்க முடிவு செய்திருப்பதாக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

டில்லியில் பத்மபூஷன் விருது பெற்ற ரஹ்மானுக்கு டெல்லி தமிழ்ச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் ரஹ்மானை பாராட்டி பேசினார்கள். தமிழ் சிறுவர்கள் ‌ஜெய்ஹோ பாடலை பாடி அசத்தினார்கள்.

அப்போது பேசிய ரஹ்மான், ஜெய்ஹோ இந்திப் பாடலை தமிழில் உருவாக்க முடிவு செய்துள்ளேன். தமிழ் சிறுவர், சிறுமிகள் ஜெய் ஹோ பாட்டை விழாக்களில் பாடியதை கேட்டு எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது. அடுத்த வருடம் ஜெய் ஹோ பாடல் தமிழில் வெளியாகும், என்றார்.

ஸ்லம்டாக் மில்லினர் இந்திப்படம் கடந்த வருடம் ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றார்.

ஒரு விருது அப்படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு கிடைத்தது. இதன் மூலம் ஜெய் ஹோ பாடல் உலகமெங்கும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes