கொசுவை விரட்ட மூலிகை மருந்து

கொசுவை விரட்ட வேப்பங்கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் எம்.பில்., பயோகெமிஸ்ட்ரி படிக்கும் மாணவி கிருஷ்ணவேணி. கொசுவை விரட்ட இயற்கை மூலிகை மூலம் மருந்து தயாரிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டார்.

கல்லூரி ஆய்வுக்கூடத்தில் வேப்பங்கொட்டைகள் மூலம் கொசுவை விரட்ட மூலிகை மருந்தை இம்மாணவி கண்டுபிடித்தார்.

அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஈரோட்டில் நடந்த முதலாவது இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு முதல் பரிசு கிடைத்தது. சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. கிருஷ்ணவேணிக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes