ஏறுமுகத்துடன் முடிந்தது இந்திய பங்குச்சந்தை

பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பங்குச்சந்தையில் தொடர்ந்து இன்றும் ஏறுமுகம் காணப் பட்டது. 

கடந்த வாரம், துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டதன் காரணமாக துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரெலியாக இந்திய பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. 

இந்நிலையில், துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், நிபுணர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். 

இதனால், இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் முதல் நாள் ஏற்றம் காண தொடங்கியது. மேலும், ‌முதல் நாளான நேற்று பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டது.



இந்நிலையில்,இன்று தொடங்கிய பங்குச்சந்தையும் ஏறுமுகத்துடன் தொடங்கியது. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139.37 புள்ளிகள் அதிகரித்து 17,065.59 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 34.65 புள்ளிகள் அதிகரித்து 5,067.35 புள்ளிகளோடு தொடங்கியது.



ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பங்குகள் 1.24 சதவீதமும், ஸ்டீர்லைட் இன்டஸ்டிரீஸ் 2.06 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 1.09 சதவீதமும், ஹிந்தால்கோ 2.03 சதவீதமும், மாருதி சுசுகி 2.47 சதவீதமும், எஸ்.பி.ஐ., 0.87 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., பங்குகள் 0.56 சதவீதமும் ஏற்றம் கண்டன.



வர்த்தக நேர முடிவில், இந்திய பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 272.05 புள்ளிகள் அதிகரித்து 17198.27 புள்ளிகளோடு நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 89.30 புள்ளிகள் அதிகரித்து 5122.00 புள்ளிகளோடு நிலைபெற்றது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes