செல்போன் சாதனங்கள் ஏற்றுமதி: இந்தியா சாதனை

செல்போன் சாதனங்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. சுமார் 60க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு 6 கோடி செல்போன் சாதனங்கள் ஏற்றுமதி செய்துள்ளதாக ‌தெரிவிக்கப் பட்டுள்ளது.

உலகில் அதிகமாக செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், செல்போன் சாதனங்களை ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது.


உலக அளவில், ஆண்டுக்கு 110 கோடி செல்போன் சாதனங்கள் உற்பத்தி ஆகின்றன. இதில், இந்தியாவில் மட்டும் தயாரிக்கப்படும் செல்போன் சாதனங்களின் அளவு 10 சதவீதம் ஆகும். நாட்டில் ஆண்டுக்கு 12 கோடி செல்போன் சாதனங்கள் தயாராகின்றன.


கடந்த 2006-ஆம் ஆண்டில், இந்தியாவில் ஆண்டு செல்போன் உற்பத்தி திறன் 3.10 கோடி என்ற எண்ணிக்கையாக இருந்தது.


இந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 10.70 கோடி டன்னாக உயரும் என சர்வதேச தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் கார்ட்னர் கடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முன்னறிவிப்பு செய்திருந்தது.


இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த உற்பத்தி தற்போது 12 கோடியாக அதிகரித்துள்ளது. ஆக, செல்போன் உற்பத்தியில் இந்தியா இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளது. இந்த உற்பத்தியை வரும் 2012-ஆம் ஆண்டிற்குள் 25 கோடியாக உயர்த்த இந்திய செல்போன் சாதனங்கள் தயாரிப்பு சங்கம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


மேலும், வரும் 2012-ஆம் ஆண்டிற்குள் 10 கோடி செல் போன் சாதனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக இச்சங்கத்தின் பிரசிடெண்ட் பங்கஜ் மோகிந்ரோ தெரிவித்தார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes