இளம் வயதில் கம்ப்யூட்டர் துறையில் சாதனை

இளம் வயதில், கம்ப்யூட்டர் துறையில் பொதுவாக யாரும் எண்ணிப் பார்க்க முடியாத பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார் கோவையைச் சேர்ந்த கார்னிகா யஷ்வந்த். பள்ளியில் பயிலும் போதே கம்ப்யூட்டர் துறையின் தொழில் நுட்பங்கள் இவரை ஈர்க்கத் தொடங்கியது.

சிறுவயதிலேயே தானாகவே அவற்றைக் கற்றுக் கொண்ட இவர், தனது 15 ஆம் வயதிலேயே அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் ஆன்லைன் வழியில் தகவல் தொழில் நுட்ப பயிற்சியில் சேர்ந்து தேர்வெழுதி பட்டம் பெற்றார்.

தகவல் தொழில் நுட்பத்தில் அசோசியேட் ஆப் சயின்ஸ் என்னும் இந்த பட்டம் வெஸ்ட் புரூக் பல்கலைக்கழகத்தின் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் என்னும் கல்வி நிலையம் வழங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள இந்தோ பிரிட்டிஷ் அகடமியில் எம்.எஸ். ஆபீஸ் முதலாக ஜாவா, ஏ.எஸ்.பி., சிவில் ட்ராப்ட் மேன்ஷிப் எனப் பல பிரிவுகளில் சான்றிதழ் பெற்றுள்ளார்.

டேட்டா பேஸ் பிரிவில் ஆரக் கிள், எஸ்.க்யூ.எல். ஜாவா மற்றும் சி ப்ளஸ் ப்ளஸ் ஆகியவற்றிலும் பல சான்றிதழ் களுக்குத் தகுதி அடைந்துள்ளார். அனி மேஷன் துறையில் இன்று பிரபலமாக உள்ள பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களில் தானாக திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

முப்பரிமாண கேம்ஸ்களை உருவாக்குவதில் தன் வல்லமையை நிரூபித்துள்ளார். இவற்றைக் கற்றுக் கொண்டதுடன் மட்டு மின்றி, கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். ருத்ரா ஆட்ஸ் மற்றும் மீடியா சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவனங் களில் தலைமைப் பொறுப்பில் பணியாற் றியுள்ளார்.

படித்ததோடு நில்லாமல் இ.என்.எஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கி வெப் டிசைன், வெப் டெவலப்மெண்ட், இன்டர்நெட்டில் விளம்பரம் செய்வது, பொருள்களை ஆன்லைனில் மார்க்கட்டிங் செய்வது ஆகிய முப்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இயக்கி வருகிறார்.

பல முன்னணி நிறுவனங்கள் இவர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவற்றில் இஸ்கான், ஐ.பி.எம். பயோ கண்ட்ரோல் ஆகியவை குறிப்பிடத் தக்கன. இளம் வயது என்றாலும் அறிவிலும் அனுபவத்திலும் வயது கூடிய பலருக்கு இணையாகப் பல கருத்தரங்களில் பங்கு கொண்டு சிறப்பாக பங்களித்துள்ளார். இவரை பல சமூக அமைப்புகள் பாராட்டி கவுரவித்துள்ளன.

தகவல் தொழில் நுட்பம் மட்டுமின்றி கலை மற்றும் மானிடவியல் குறித்து பல கவிதைகளை ஆங்கிலத்தில், எழுதி உள்ளார். கவிதைகள் அனைத்தும் இந்த உலகின் இன்றைய நிலை குறித்து, இவர் கொண்டுள்ள அன்பையும் ஆதங்கத்தினையும் காட்டுகின்றன.


என் அன்பான கடவுளே...


இந்த உலகத்தை தூக்கி நிறுத்த


எனக்கு


மன உறுதியையும் சக்தியையும் கொடு.


இந்த உலகத்தைப் பாருங்கள்;


இப்போது கூட தாமதமில்லை;


இன்று, இல்லை நாளை இந்த உலகம்


நம் கைகளை விட்டுப் போய்விடும்.


அதனால் இன்றே உறுதி எடுப்போம்;


நான் மட்டுமல்ல நாம் அனைவரும்


இந்த உலகைத் தூக்கி நிறுத்துவோம்.


வளரும் உலகின் வளத்தை உயர்த்தி அமைதியைக் காக்க இவரைப் போல திறமை கொண்ட பல இளைஞர்கள் இருந்தால் போதும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes