தமிழகத்தில் 'சிக்-குன் குனியா'

தமிழகத்தில் சிக்-குன் குனியா நோய் இருப்பதாக மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், இயக்குனர் இளங்கோ ஆகியோர் உறுதி செய்தனர். மதுரையில் நேற்று அவர்கள் கூறியதாவது:


இந்த காலநிலையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தற்போது பரவும் வைரஸ் காய்ச்சலை சிக்-குன் குனியா என்று நினைக்கின்றனர். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.


இந்தாண்டு சிக்-குன் குனியா தடுப்பு நடவடிக்கைக்காக 3.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 10 களப்பணியாளர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஐந்து நவீன கொசு ஒழிப்பு இயந்திரங்கள், 45 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன.


இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கொசு மருந்து அடிக்க 9,000 ரூபாய் செலவாகும். கொசுக்கடியை தவிர்க்க, இரவு வெள்ளை நிற ஆடை அணியவும்; கால் வெளியே தெரியக்கூடாது. காய்ச்சல் வந்தால் உடனடியாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes