ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்!

"கந்தசாமி' படத்துக்குப் பின் "ராவணா' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக் கட்ட காட்சிகள் கேரளத்தின் அடர்ந்த வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

"ராவணா' முடிந்த பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் விக்ரம். இதற்காக கடந்த வாரம் செல்வராகவனைச் சந்தித்து கதை கேட்டிருக்கிறார்.

"ஆயிரத்தில் ஒருவனை' முடித்து விட்டு குறுகிய கால படமாக "மாலை நேரத்து மயக்க'த்தை தொடங்கியிருக்கும் செல்வராகவன், அப்படத்தை ஜனவரிக்குள் முடிக்கிறார்.

இந்நிலையில், "யாவரும் நலம்' விக்ரம்குமார் இயக்கும் படத்தையும் நடிக்கிறார் விக்ரம். "கந்தசாமி'யின் தொடக்கத்துக்கு முன்பே பேசப்பட்ட இப்படம் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் வருகைக்காகக் காந்திருந்தது.

இந்தியில் பிஸியாக இருந்த பி.சி. வந்துவிடவே, படத்தின் தொடக்கம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் விக்ரம் நடிப்பார் எனத் தெரிகிறது.

பி.சி.ஸ்ரீராம் -விக்ரம் இணையும் இந்தப் படத்துக்கு "24' என்ற பெயர் சூட்டப்படலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து விக்ரம் தயாரிப்பில், சசிகுமார் இயக்கும் படம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடுத்த மாதம் தொடங்குகிறது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes