பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்

பத்ம விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2010-ம் ஆண்டுக்கான நாட்டின் மிகப் பெரிய விருதான பத்ம விருது எனப்படும், பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கலை, பண்பாடு, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணிகள், அறிவியல், பொறியியல் துறை நிர்வாகம், வியாபாரம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்து, தொண்டாற்றி சாதனைப் படைத்துள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதியான நபர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று உரிய ஆதாரங்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப். 30-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes