ஏழரை சனி முடிந்து விட்டது

தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்கு நேற்று எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. வந்தார். சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை பிடித்திருந்த ஏழரை சனி தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் குச்சனூர் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வந்தேன். கட்சி ரீதியாக நான் அ.தி.மு.க.வில் இணைந்த போது எனக்கு ஏழரை சனி தொடங்கியது. தற்போது முடிந்து விட்டதால் அக்கட்சியில் இருந்தும் விலகி விட்டேன். இனி தி.மு.க. அரசுக்கு முழு ஆதரவு அளிப்பேன்.

தேவையில்லாமல் மயிலாப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வேண் டியதில்லை. ஒரே நேரத் தில் அ.தி.மு.க. சார்பில் வாக்களித்த பொதுமக்களுக் கும், தி.மு.க.வை சேர்ந்த வர்களுக்கும் நான் எம்.எல்.ஏ.வாக இருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து நானாக விலகவில்லை. கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதாதான் என்னை நீக்கினார். இருந் தாலும் எனக்கும், எஸ்.எஸ்.சந்திரனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்பதால் நான் ஒதுங்கிக் கொண்டேன்.

இந்தியாவில் வெற்றி கரமாக செயல்படுவது கருணாநிதி ஆட்சி மட்டும் தான். அந்த நல்லாட்சி தொடர்வதால் தி.மு.க.வில் இணைவதில் உறுதியாக உள்ளேன். எனக்கென்று எதிரிகள் யாரும் இல்லை. என்னை எதிர்ப்பவர்களை சனி பகவான் பார்த்துக் கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes