குறும்பட திரைப்பட விழா

வறுமை ஒழிப்புக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் நம் நாடு எட்ட வேண்டிய இலக்குகள் போன்றவற்றை வலியுறுத்தி தானம் அறக்கட்டளை சார்பில் குறும்பட விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்கும் குறும்படங்களின் போட்டி கடந்த செப்டம்பர் 14 முதல் 18 வரை மதுரையில் நடைபெற்றது.

போட்டியில் கலந்து கொண்ட 90 குறும்படங்களில் இருந்து 15 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த 3 படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

ஃபிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.

இந்த 15 படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 சிறந்த குறும்படங்களுக்கு தலா ரூ.50,000 ரொக்கத் தொகை வழங்கப்படும். இந்த தொகையை கொண்டு உருவாகும் 3 குறும்படங்கள் தமிழகத்தில் உள்ள 14 திரைப்பட கழகங்களின் உதவியுடன் நடமாடும் திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் போன்றவற்றின் மூலம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

நிறைவு விழாவில் இயக்குநர் பாலுமகேந்திரா, எடிட்டர் பி.லெனின், தானம் அறக்கட்டளையின் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் கே.ரங்கநாதன், தானம் அறக்கட்டளையின் குழுத் தலைவர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes