செயற்கைக்கோள் மூலம் எஸ்பிஐ ஏடிஎம் ஒருங்கிணைப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தானியங்கி பணப்பட்டுவாடா மையங்கள் (ஏடிஎம்) அனைத்தும் செயற்கைக்கோள் மூலம் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதற்கான ஆர்டரை ஹியூஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்கள் உள்ள அனைத்து மையங்களிலும் 2,880 வி-சாட் இணைப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வங்கிகள் அல்லாத பிற இடங்களில் உள்ள ஏடிஎம்களை ஒருங்கிணைக்க முடியும்.

இந்தப் பணிக்கான ஒப்பந்த மதிப்பு ரூ. 22.5 கோடியாகும். ஏடிஎம்களை ஒருங்கிணைப்பது, செயற்கைக்கோள் தொடர்பை நிர்வகிப்பது ஆகியன இதில் அடங்கும்.

வி-சாட் தொடர்பானது வங்கியின் மத்திய தகவல் தொகுப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தகவல் தொகுப்பு மையம் பேரழிவு இடர்பாடுகளின்போதும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் இந்த மையம் இருக்கும்.

சுமார் 2,000 ஏடிஎம்கள் எஸ்பிஐ-யின் துணை வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதுவரையில் ஹியூஸ் நிறுவனம் வங்கியின் கோர் வங்கி சேவையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவை 6,500 கிளைகள் மற்றும் 4,500 ஏடிஎம்களில் நிறுவப்பட்டுள்ளன.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes