கங்குலியின் உறவுக்கார சிறுமி பன்றிக் காய்ச்சலால் அவதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலியின் உறவுக்கார சிறுமி பன்றிக் காய்ச்சலால் அவதிப்படுகிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கங்குலியின் உறவுக்கார சிறுமி ஸ்னேகா. இவர் கொல்கத்தாவிலுள்ள லா மார்ட்டினர் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை முதல் இவருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் எம்.ஆர். பங்குர் மருத்துவமனையிலுள்ள தனிப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ளனர். இத்தகவலை கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்னேகாசிஷ் தெரிவித்தார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes