மைக்கேல் ஜாக்சன் நினைவாக இசை நிகழ்ச்சி

மறைந்த பாப் இசை நாயகன் மைக்கேல் ஜாக்சனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை சென்னை ரோட்டரி சங்கம் நடத்துகிறது.

இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் குழுவில் உள்ள கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் சங்கர் மகாதேவன், எசான்-லாய், பிரவீன்மணி பாடகர்கள் கார்த்திக், பென்னி தயால், சுசித்ரா, சுரேஷ் பீட்டர்ஸ், நரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஜாக்சனின் பிரபல ஆல்பங்களில் இடம்பெற்ற பாடல்களைப் பாடுகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடன இயக்குநர் பிரபுதேவா உள்ளிட்ட பிரபலங்கள் மைக்கேல் ஜாக்சனைப் பற்றிய தங்கள் கருத்துகளை விடியோ மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர்.

சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 29-ம் தேதி மைக்கேல் ஜாக்சனின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகை, "ஆட்டிஸம்' குறைபாடுள்ள குழந்தைகளின் நலனுக்காக வழங்கப்படுகிறது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes