உறவுகள் மேம்பட விளக்குமாறு அடி

ஆண்டிபட்டி: உறவை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக உறவினர்களிடையே விளக்குமாறால் அடித்துக் கொள்ளும் வினோதமான கோவில் திருவிழா ஆண்டிபட்டி அருகே நடந்தது.தேனி மாவட்டம்,ஆண்டிப்பட்டி அருகே மறவப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நடந்தது.அம்மனுக்குக் கரகம் எடுத்து பொங்கல் வைத்து முளைப்பாரி எடுத்தனர்.

நிறைவு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாமன்-மைத்துனர் உறவு முறை உள்ளவர்கள் வேடம் அணிந்து,கோவில் முன் விளக்குமாறால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.விளக்குமாறால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதால் மாமன்-மைத்துனர் உறவில் அதிக நெருக்கம் ஏற்படும் என்பது இவர்களது நம்பிக்கை


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes