பேஸ்புக் வாங்கிய புதிய நிறுவனம்

இணையத்தில் பாதுகாப்பு வழங்கும் பணிகளில் இயங்கி வரும் பிரைவேட் கோர் (PrivateCore) நிறுவனத்தை, சமூக இணைய தளமான பேஸ்புக் வாங்கியுள்ளது. 

சென்ற மாதம், அமெரிக்க உளவு அலுவலகம், பேஸ்புக் சர்வர்களை ஊடுறுவியதாகவும், அப்போது பல்லாயிரக்கணக்கான பயனாளர்களின் தனி நபர் தகவல்களை, உளவு அமைப்பு எடுத்துக் கொண்டதாகவும் செய்தி வெளியானது. 

இதனால், கலக்கமுற்ற பேஸ்புக் நிறுவனம், தன் சர்வர்களைப் பாதுகாக்க, இவ்வகையில் பாதுகாப்பு வழங்கி வரும் பிரைவேட் கோர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது. 

என்ன பணம் கொடுத்து வாங்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியே அறிவிக்கப்படவில்லை என்றாலும், பிரைவேட் கோர் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு தொழில் நுட்பத்தினை தன் தளங்களில் பயன்படுத்த இருப்பதாக, பேஸ்புக் அறிவித்துள்ளது. 

இந்த தொழில் நுட்பத்தின் மூலம், மால்வேர் தொகுப்புகள் ஊடுறுவலைத் தடுக்க முடியும். 

மேலும், பேஸ்புக் அனுமதிக்காத புரோகிராம்கள் எதுவும் அணுக இயலாத வகையில் இது செயல்படும். தன் நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்டதனை, பிரைவேட் கோர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes