ஏர்டெல் தரும் 4ஜி இணைய சேவை




ஏர்டெல் நிறுவனம், பெங்களூருவில், தன் 4ஜி இணைய சேவையைத் தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாகப் பயன் பெறுபவர்கள், ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே. 

இந்த போன்களில், ஏற்கனவே 3ஜி பயன்படுத்தக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்தவர்கள், கூடுதலாக எதுவும் செலுத்தாமல், 4ஜி செயல்பாட்டினை, அதே கட்டணத்தில், அனுபவிக்கலாம். 

ப்ரீ பெய்ட் மற்றும் போஸ் பெய்ட் என இரண்டு திட்டங்களில் இயங்குபவர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் 3ஜி சிம் கார்டினை, 4ஜி சிம் கார்டுக்கு மாற்ற வேண்டியதுதான். 

அது சரி, ஏன் ஆப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன்களில் மட்டுமே இது கிடைக்கும் என விசாரித்த போது, இந்த போன்கள் மட்டுமே, 4ஜி தொழில் நுட்ப வசதியினைப் பெறும் வகையிலான கட்டமைப்பு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

Huawei Ascend P1 மாடல் போனிலும் இந்த வசதி உள்ளது. மற்ற போன்களில் இது இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் 4ஜி சேவை வழங்கப்பட்டு வந்தாலும், மொபைல் சாதனங்களுக்கு இந்த சேவை இப்போதுதான் வழங்கப்படுகிறது. 

4ஜி சார்ந்தும் சில திட்டங்களை ஏர்டெல் வழங்கி வருகிறது. ஆர்வம் உள்ளவர்கள், அந்த நிறுவனத்தை அணுகலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes