பட்ஜெட் போன் நோக்கியா 105


இந்தியாவில், ஏப்ரல் மாத இறுதியில், நோக்கியாவின் வண்ணத்திரை கொண்ட பட்ஜெட் மொபைல் போன், நோக்கியா 105 விற்பனைக்கு வர இருக்கிறது. 

சென்ற பிப்ரவரி மாதம் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் இது பற்றிய அறிவிப்பு வெளியானது. 

1.45 அங்குல வண்ணத்திரை, எப்.எம். ரேடியோ, நோக்கியா லைப் சப்போர்ட் ஆகியன இந்த போனில் கிடைக்கும். சென்ற ஆண்டு நோக்கியா நிறுவனம் வெளியிட்ட நோக்கியா 100 மற்றும் 101 போல இவை சந்தையைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதிலும் நோக்கியா சிரீஸ் 30 சிஸ்டம் உள்ளது. தொடர்ந்து 12.5 மணி நேரம் பேச முடியும். 35 நாட்களுக்கு இதில் மின்சக்தி தங்குகிறது. 

இதனை அறிமுகப்படுத்துவதன் மூலம், நோக்கியா தன் மாடல் 1280 போனை சந்தையிலிருந்து நீக்கிட முயற்சிக்கிறது. இந்த மாடல் போன், இதுவரை 10 கோடி விற்பனையாகியுள்ளது. 

இந்திய அரசு, ரூ.2,000க்குக் குறைவான விலையுள்ள மொபைல் போன்களுக்கு சுங்க வரி விதிப்பதில்லை. 

எனவே, மிகச் சொற்ப விலையில், நோக்கியா 105 போன்ற மாடல் போன்களை, அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றன. இறுதியாக இதன் அதிகபட்ச விலை ரூ.1249


1 comments :

கலியபெருமாள் புதுச்சேரி at April 20, 2013 at 2:53 PM said...

நோக்கியா போனுக்கு மக்கள் மத்தியில் இன்னமும் மரியாதை உள்ளது. இன்றும் 1100 மாடலை பலர் விரும்புகிறார்கள்..

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes